தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக சண்முகம் இன்று பிற்பகல் பதவியேற்றுக் கொண்டார்.
தமிழக அரசின் தலைமைச் செயலாளராக இருந்த கிரிஜா வைத்தியநாதன் இன்று பணி ஓய்வு பெற்ற நிலையில், நிதித்துறை செயலாளராக இருந்த சண்முகம், தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக இன்று பிற்பகல் பொறுப்பேற்றார்.
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த சண்முகம், கடந்த 1985-ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ் அதிகாரியானார். கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் 9 ஆண்டு காலம் நிதித்துறை செயலராக பொறுப்பு வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.