சென்னை
மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாகத் தமிழக கடலோர மாவட்டங்களுக்கு மழை வாய்ப்புள்ளதாகவும், உள்மாவட்டங்களில் ஆலங்கட்டி மழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை மையம் நேற்று அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மழை பொழிந்து வரும் நிலையில், சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் கனமழை பெய்து வருகிறது.
குறிப்பாகச் சென்னையின் புறநகர்ப் பகுதியான பூந்தமல்லி, செங்குன்றம், பொன்னேரி, மாதவரம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. திடீர் கனமழை பெய்து வெப்பம் தணிந்ததால் சென்னைவாசிகள் மகிழ்ச்சியில் உறைந்துள்ளனர்.