tamilnadu

img

குடியுரிமை சட்டத்தை திரும்பப் பெறக் கோரிக்கை

தஞ்சாவூர், பிப்.5- தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டி னம் அனைத்து சமுதாய கூட்டமைப் பின் சார்பில், குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக் கோரி கண்டனப் பொதுக்கூட்டம் அதிராம் பட்டினம் பழைய அஞ்சலக அலுவலக சாலையில் வெள்ளிக்கிழமை நடை பெற்றது. நாகை சட்டமன்ற உறுப்பி னரும், மனிதநேய ஜனநாயகக் கட்சி மாநிலப் பொதுச் செயலாளருமாகிய எம்.தமீமுன் அன்சாரி, மே.17 இயக்கம் மாநில ஒருங்கிணைப்பாளர் திரு முருகன் காந்தி, மவ்லவி. ஹூசைன் மன்பஈ, ஏ.ஜெ. ஜியாவுதீன், புருசோத்த மன், மவ்லவி முகவை இம்ரான் ஆகி யோர் கண்டன உரை நிகழ்த்தினர். கூட்டத்திற்கு, எம்.எம்.இப்ராஹீம், எம்.இசட்.பசீர் அகமது ஆகியோர் தலைமை வகித்தனர். ஹஸனார் வர வேற்றுப் பேசினார். நிகழ்ச்சியினை, அதிரை மைதீன் தொகுத்தளித்தார். நிறைவில், ஏ.பைசல் அகமது நன்றி கூறி னார். பெண்கள் உட்பட 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்று கண்டன முழக்கமிட்டனர்.

;