tamilnadu

img

தமிழகத்தில் மேலும் 1989 பேருக்கு கொரோனா... ஒரே நாளில் 30 பேர் பலி 

சென்னை 
நாட்டின் புதிய கொரோனா மையமாக உள்ள தமிழகத்தில் பரவல் வேகம் உச்சத்தில் உள்ளது. கடந்த ஒருவார காலமாக தினமும் 1800-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுவதால் மக்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர். குறிப்பாக தலைநகர் மண்டலமான சென்னை கொரோனாவால் உருக்குலைந்துள்ளது.

இந்நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் தமிழகத்தில்  1989 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு 42,687 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இன்று ஒரே நாளில்  இதுவரை இல்லாத அளவிற்கு 30 பேர்  பலியாகியுள்ள நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 397 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 1487 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு மொத்த பாதிப்பு 30,444 ஆக உயர்ந்துள்ளது. 

;