tamilnadu

img

446 ஊர்ப்புற நூலகர்களுக்கு பதவி உயர்வு வழங்கி அரசாணை வெளியீடு!

10 ஆண்டுகளுக்கு மேலாக பதவி உயர்வு இன்றி பணியாற்றி வரும் 446 ஊர்ப்புற நூலகர்களுக்கு மூன்றாம் நிலை நூலகர்களாக பதவி உயர்வு அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது.
பள்ளிக்கல்வி - பொது இயக்ககம் மாவட்ட நூலக ஆணைக்குழுக்களில் செயல்படும் ஊர்ப்புற நூலகங்களில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பதவி உயர்வு இன்றி ஊர்ப்புற நூலகர்களாக பணியாற்றி வரும் , 446 ஊர்ப்புற நூலகர்களுக்கு தற்காலிக பணி விதிகளில் விதி 3 ( பணி நியமன முறை ) மற்றும் விதி 6 ( இட ஒதுக்கீடு ) ஆகிய விதிகளுக்கு தளர்வு செய்து மூன்றாம் நிலை நூலகர்களாக பதவி உயர்வு வெளியிடப்படுகிறது.
காலமுறை ஊதியத்துக்கு மாற்றம் செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
 

;