tamilnadu

img

ஓ.பன்னீர்செல்வம் சகோதரர் மரணம்: முதல்வர் இரங்கல்.....

சென்னை:
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் சகோதரர் பாலமுருகன் மறைவுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட் டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-

திமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்தின் இளைய சகோதரர் ஓ.பாலமுருகன் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில் மரணம் அடைந்திருப்பதை அறிந்து வேதனையுற்றேன். தகவல் அறிந்ததும் ஓ.பன்னீர்செல்வத்தை தொலைபேசி மூலமாகத் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினேன்.ஓ.பாலமுருகனை இழந்து வாடும் ஓ.பன்னீர்செல்வத்துக்கும், அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

காவல் ஆணையருக்கு இரங்கல்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள் இரங்கல் குறிப்புகளில் கூறியிருப்பதாவது:-கொரோனாற்று பாதிப்புக்குச் சிகிச்சை பெற்று வந்த சென்னை பல்லாவரம் காவல் உதவி ஆணையர் ஈஸ்வரன் றைந்த செய்தி அறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். பெருந்தொற்றுக் காலத்திலும் தன் கடமையைச் சிறப்பாக ஆற்றி வந்த ஈஸ்வரனின் மறைவு, தமிழ்நாடு காவல்துறைக்குப் பேரிழப்பாகும்.ஈஸ்வரன் மறைவால் வாடும் அவரது குடும்பத் தினருக்கும், காவல்துறை நண்பர் களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.முன்கள வீரர்களாக நின்று கடமையாற்றுவோர் அனைவரும் முன்எச்சரிக்கையோடும், உரிய பாதுகாப்புடனும் தங்களது பணியை மேற்கொள்ள வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

கருணாகரன்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜாவின் சகோதரர் கருணாகரன் கொரோனா தொற்றால் உயிரிழந்தார் என்ற துயரச் செய்தி அறிந்து மிகுந்த வேதனையுற்றேன். அவரது மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.கருணாகரனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் டி.ராஜாவுக்கும் ஆழ்ந்த அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

;