tamilnadu

img

தனியார் வங்கி முன்பு தீக்குளித்த இளைஞர் மரணம்...  

தஞ்சாவூர் 
தஞ்சாவூர் மாவட்டத்தின் புறநகரான வல்லம் பகுதியின் வள்ளலார் தெருவைச் சேர்ந்தவர் ஆனந்த் (40). இவர் பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள  தனியார் வங்கியில் வீடு கட்ட (2015-ஆம் ஆண்டு) ரூ. 9 லட்சம் கடன் வாங்கியுள்ளார். 4 வருடத்தில் வட்டியுடன் ரூ.13 லட்சம் கட்டியுள்ள நிலையில், கூடுதலாக ரூ. 6 லட்சம் சேர்த்து கட்டுமாறு வங்கி நிர்வாகம் ஆனந்தை மிரட்டியுள்ளது. இரும்பு வெல்டர் வேலை செய்து வரும் ஆனந்த் கொரோனா காலத்தை எடுத்துக்கூறியுள்ளார். 

ஆனால் வங்கி நிர்வாகம் ஆனந்த்-தின் நிலைமையை கண்டுகொள்ளாமல் பணம் பறிப்பதிலேயே குறியாக இருந்துள்ளது. குறிப்பாக ரூ.6 லட்சத்தை உடனடியாக செலுத்து வங்கி நிர்வாகம் அழுத்தம் கொடுத்துள்ளது. இதனால் மனமுடைந்த ஆனந்த் வங்கி வாசலிலேயே தன் உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீவைத்துக் கொண்டார். அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

இந்நிலையில் ஆனந்த் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இது குறித்து வல்லம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். உயிரிழந்த ஆனந்துக்கு ஹேமா என்ற மனைவியும், 8 மற்றும் 4 வயதில் 2 மகன்கள் உள்ளனர்.

;