tamilnadu

தோழர் என். சங்கரய்யாவுக்கு விருது: முதல்வருக்கு திமுக எம்எல்ஏ நன்றி....

சென்னை:
சட்டப்பேரவையில் நடந்த விவாதத்தில் பங்கேற்று பேசிய பல்லாவரம் தொகுதி திமுக உறுப்பினர் கருணாநிதி,“ முந்தைய அதிமுக அரசு குப்பைக்கு கூட பல மடங்கு வரியை உயர்த்தியது என்று கூறினார்.

சொத்து வரியை பலமடங்கு அதிகரித்தும் சென்னை மாநகரம் மட்டுமன்றி நகர மக்களின் அடிப்படை தேவைகளை கூட நிறைவேற்றித்தர நீதி இல்லாத நிலையை உருவாக்கினார்கள் என்று குற்றம் சாட்டினார்.உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தலை நடத்தாமல் தொடர்ந்து காலம் கடத்தி வந்ததால் இந்திய ஒன்றிய அரசு வழங்க வேண்டிய 2500 கோடி ரூபாய் தமிழகத்திற்கு கிடைக்கவில்லை என்றும் இதனால் உள்ளாட்சி அமைப்புகள் கடும் நெருக்கடியில் தள்ளாடிக் கொண்டிருப்பதாக கூறினார்.
‘தகைசால் தமிழர்’என்ற விருது அறிவித்ததும் அதை எனது தொகுதிக்குட்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் சுதந்திரப் போராட்ட வீரருமான தோழர் என். சங்கரய்யாவுக்கு அறிவித்தது மட்டுமின்றி அந்த விருதை நேரில் அவரது இல்லத்திற்கு வந்து வழங்கிய முதலமைச்சருக்கு நானும் ஒரு சுதந்திரப் போராட்டத் தியாகியின் மகன் என்பதால் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என்று அவர் கூறினார்.

;