tamilnadu

img

ஏபிவிபி தலைவர் சுப்பையாவை கைது செய்க... இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வலியுறுத்தல்

சென்னை:
ஏபிவிபி தலைவர் சுப்பையாவை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக சங்கத்தின் மாநிலத் தலைவர் என்.ரெஜீஸ்குமார், செயலாளர் எஸ்.பாலா ஆகியோர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

ஆர்எஸ்எஸ் சங்பரிவார் அமைப்பான ஏபிவிபியின் அகில இந்தியத்தலைவராக இருப்பவர் மருத்து வர் சுப்பையா சண்முகம். இவர்,சென்னை  கீழ்ப்பாக்கம் அரசு மருத்து வக்கல்லூரியில்  பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். இவர் தனது வீட்டின்அருகில் வசித்துவரும் 62 வயது  பெண்ணின் வீட்டு வாசலில், அவரதுஎதிரிலேயே சிறுநீர் கழித்துள்ளார். அவரது வாசலில் மாஸ்க் உள்ளிட்ட குப்பைகளை வீசியுள்ளார். பாலியல் ரீதியாக தகாத செயல்களில் ஈடுபட்டுள் ளார். இது குறித்து சந்திராவின் உறவினர் பாலாஜி விஜயராகவன் என்பவர்கடந்த ஜூலை 11 அன்று சென்னை ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவர், தனதுபுகாருக்கு ஆதாரமாக சிசிடிவி கேமரா பதிவுகளையும் அளித்துள்ளார். ஆனாலும், காவல்துறை சுப்பையா சண்முகம் மீது வழக்குப்பதிவு செய்யவில்லை.  குறிப்பிட்ட வீடியோ காட்சிகள்சமூக வலைத்தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தின. சுப்பையா சண்முகம் மீது நடவடிக்கை எடுக்கவேண்டுமென பலதரப்பிலும் வலியுறுத்தப்பட்டது. டிவிட்டர் மற்றும் ஊடகங்களில் விவாதப்பொருளாக மாறிய நிலையில், வேறு வழியின்றி ஜூலை 25 அன்று சுப்பையா சண்முகம் மீது ஜாமீனில் வரமுடியாத பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆனாலும், தமிழக காவல்துறை சுப்பையா சண்முகத்தை கைது செய்யவில்லை. இந்நிலையில், அவர் மீது கொடுக்கப்பட்ட புகார் மர்மமான முறையில் திரும்பப்பெறப்பட்டுள்ளது.

வேடிக்கை பார்க்கும் போலீஸ்
பெண்கள் மீது தொடரும் பாலியல் துன்புறுத்தல்களை தடுக்க வேண்டிய பொறுப்புள்ள தமிழக அரசும், காவல்துறையும் பாலியல்குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளி களை பாதுகாக்க முயல்வதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. பாதிக்கப்பட்டவருக்கு ஆதரவாக நிற்கவேண்டிய தமிழக அரசும், காவல்துறையும் குற்றவாளிகளுக்கு ஆதரவாக இருந்ததன் விளை வாகத்தான் புகார் கொடுத்தவர் அந்த புகாரை திரும்பப்பெற நிர்பந்திக்கப் பட்டுள்ளார். தமிழக அரசின் இத்த கைய அலட்சியமான நடவடிக்கையை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.தமிழகத்தில் ஆர்எஸ்எஸ், பிஜேபி சங்பரிவார் அமைப்புகளை சார்ந்தவர்கள் குற்றச்செயல்களில் ஈடுபடு கிறபோது அவர்கள் மீது தமிழக அரசின்காவல்துறை நடவடிக்கை எடுக்கத் தயங்குகிறது என்பதை பல தருணங்களில் பார்த்து வருகிறோம்.  உயர்நீதிமன்ற உத்தரவை எச்.ராஜா வசைபாடிய போதும், பெண் ஊடகவியலாளர்களை எஸ்.வி.சேகர் தரக்குறைவாக பேசியபோதும் தமிழக காவல்துறை கைகட்டி வேடிக்கைப் பார்த்தது. அது போன்றுதான் டாக்டர் சுப்பையா சண்முகம் மீதான புகார் மீதும் நடவடிக்கை எடுக்காமல் காலம்தாழ்த்தியது. பெரும் நிர்பந்தத்திற்குப் பிறகு வழக்குப்பதிவு செய்தாலும் கைது செய்யமறுக்கிறது. இத்தகைய நடவடிக்கைகள், தமிழக காவல்துறை ஆர்எஸ்எஸ், பிஜேபி சங்பரிவார் அமைப்புகளின் கைப்பாவையாக மாறியுள்ளதா என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

எனவே, தமிழக காவல்துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள், இப்பிரச்சனையில் தனிப்பட்ட முறையில் கவனம் செலுத்தி குற்றவாளியான ஏபிவிபி அகில இந்தியத் தலைவர் சுப்பையா சண்முகத்தை உடனடியாகக் கைது செய்யவேண்டும். சிசிடிவி காட்சிகளை ஆதாரமாகக்கொண்டு கடுமையான தண்டனையை பெற்றுத்தர வேண்டும். இது போன்ற கீழ்த்தரமான செயல்களில் ஈடுபடுபவர்கள் அரசு மருத்துவக் கல்லூரியில் துறைத்தலைவர் பொறுப்பில் இருப்பது அந்த பொறுப்புக்கே இழுக்கானதாகும். எனவே, அந்த பொறுப்பிலிருந்து அவரை உடனடியாக நீக்க வேண்டும். மேலும், பாதிக்கப்பட்ட திருமதி சந்திராவின் குடும்பத்திற்கு உரிய பாதுகாப்பு அளிக்கவேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

;