tamilnadu

img

தொழிலாளர்களுக்கு தங்கநகை பரிசு

சென்னை, மே 2 -300 நாள் பணியாற்றிய தொழிலாளர்களுக்கு தலா அரை பவுன் தங்கம் கொடுத்து மேதினத்தை கொண்டாடியது சிகாகோஉணவகம். இந்த முன்மாதிரியான நடவடிக்கையை கடந்த 35 ஆண்டுகளாக செய்து வருகிறார் உணவகத்தின் உரிமையாளர் டி.டி.சுகுமாறன்.சென்னை அடையாறில் செயல்பட்டு வரும் சிகாகோஉணவகத்திற்கு 5 கிளைகள்உள்ளன. சுமார் 50 பேர்பணியாற்று கின்றனர். இவர்களுக்கு வருடந்தோறும் சீருடை வழங்குவதோடு, மே தினத்தன்று விடுமுறையும் வழங்கப்படுகிறது. மேலும்,அன்றைய தினம் தொழிலாளர்கள் அனைவருக்கும் அதன் உரிமையாளர் ஒரு நட்சத்திர விடுதியில் விருந்து வைத்து வருகிறார்.இந்த விழாவில் தொழிலாளர்களுக்கு ஒருமாத சம்பளம் போனசும், 300 நாட்களுக்கு மேல் பணியாற்றியவர்களுக்கு அரை பவுன் தங்கத்தையும் வழங்கி வருகிறார். இந்தாண்டு மேதின நிகழ்வில் சிஐடியுஅகில இந்திய துணைத்தலைவர் ஏ.கே.பத்மநாபன் கலந்து கொண்டு தொழிலாளர்களுக்கு போனஸ் மற்றும் தங்கத்தை வழங்கினார்.இந்நிகழ்வில் சிபிஎம் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஏ.பாக்கியம், தொழிற்சங்கத் தலைவர் பா.கருணாநிதி, குடி/போதை மறுவாழ்வு மையத்தின் நிறுவனர் ஜெ.யூசுப், சென்னை பெருநகர டீக்கடை உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் இ.சுந்தரம், ப.ரவி உள்ளிட்டோர்கலந்து கொண்டனர்.

;