tamilnadu

img

ஆவணவப்படுகொலையில் ஈடுபட்ட குற்றவாளி காவல்துறையில் ஆஜர்

மேட்டுப்பாளையத்தில் தம்பியை ஆவணவப்படுகொலை செய்த  குற்றவாளி  காவல்துறையில் ஆஜராகி உள்ளார்.
கோவைமாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் ஸ்ரீ ரங்கராயன் ஓடையை சேர்ந்த கனகராஜ் அதே பகுதியைச்தேர்ந்த வர்ஷினி பிரியா என்பவரை காதலித்து வந்தார். இதில் வர்ஷினி தலித் சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் கனகராஜின் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர் . இந்நிலையில் நேற்று இருவரும் மேட்டுப்பாளையம் சிறுமுகை அருகே உள்ள வெள்ளிபாளையம் பகுதியில் சாலையோரம் நின்று பேசிக் கொண்டிருந்தனர். அப்போது கனகராஜின் சகோதரர் வினோத் என்பவர் இருவரையும் சரமாரியாக வெட்டினார். இதில் கனகராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயம் அடைந்த வர்ஷினி படுகாயங்களுடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இச்சம்பவம் குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் தனிப்படை அமைத்து தேடிவந்த நிலையில் இன்று வினோத் மேட்டுப்பாளையம் போலீசிடம் சரணடைந்துள்ளார்
 

;