tamilnadu

கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட வாலிபர் - காவல்துறையினர் விசாரணை

இளம்பிள்ளை, மே 11-  இளம்பிள்ளை அருகே  வாலிபர் ஒருவர்கி ணற் றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம், இளம்பிள்ளை அடுத்த புளியம் பட்டி மாரியம்மன் கோயில் பகுதியை சேர்ந்த குமர வேல் என்பவரின் மகன் சக்திவேல் (29). திருமணம் ஆகாத இவர் விசைத்தறி கூலி தொழில் செய்து வரு கிறார். இந்நிலையில், வெள்ளியன்று சக்திவேல் அதிக அளவில் மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்துள் ளார். பின்னர் மது போதையில் இருந்த சக்திவேலுக் கும், அவரது தந்தைக்கும் இடையே தகராறு ஏற்பட் டுள்ளது. இத்தகராறில் மனமுடைந்த சக்திவேல் வீட்டை வீட்டு சென்றுள்ளார்.

இந்நிலையில், அருகிலுள்ள விவசாய தோட் டத்தின் உரிமையாளர் தனது கிணற்றில் இருந்து தண்ணீர்  எடுக்க முற்பட்டபோது கிணற்றில் பிணம் மிதந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர்  மகு டஞ்சாவடி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத் தார். இதனைதொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் சடலத்தை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் கொலையா, தற் கொலையா என காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு காணப்பட்டது.

;