tamilnadu

img

கேரளா பாஜக தலைவரை தாக்கிய  ஆர்எஸ்எஸ்காரர்கள்

திருப்பணித்துறா:
திருப்பணித்துறா நகரசபையின் பாஜக தலைவர் வி.ஆர்.விஜயகுமார் தாக்கப்பட்ட சம்பவத்தில் அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில் ஆர்எஸ்எஸ் ஊழியர்களான விபின், ஹரி ஆகியோர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். கடந்த ஆகஸ்ட் 15 ஆம்தேதி இரவு வடக்கே கோட் டையில் தனது வாடகை வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்த விஜயகுமார் தாக்குதலுக்கு உள்ளானார். திருப்புணித்துறா தெற்கு பகுதியில்நடந்த ஒரு ரக்சா பந்தன்நிகழ்ச்சியில் பங்கேற்றது குறித்து கேள்வி எழுப்பி இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக அவர் காவல்துறையில் வாக்குமூலம் அளித்துள்ளார். பாஜகவின் கோஷ்டிவாதமே பிரச்சனைக்கு காரணம் என தெரியவந்துள்ளது. விஜயகுமார் தாக்கப்பட்டது. தொடர்பாக கடந்த வாரம்நடந்த நகரசபை கூட்டத்திலும் சலசலப்பு ஏற்பட்டது.விஜயகுமாரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூட் டத்தில் வலியுறுத்தப்பட்டது. பாஜகவின் 12 உறுப்பினர் களில் 7 பேர் இதற்கு எதிர்ப்புதெரிவித்தனர். இதையொட்டி நகரசபையில் பாஜக இரண்டாக பிளவுபட்டுள்ளது. புதனன்று இதுகுறித்து பாஜக நடத்திய கூட்டத்தில்விஜயகுமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

;