tamilnadu

img

கைகள் இல்லாத மாற்றுத்திறனாளியை ‘கால்பிடித்து’ வாழ்த்திய கேரள முதல்வர்

திருவனந்தபுரம்:
தனது பிறந்தநாளில் முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்கி காலால் செல்பி எடுத்துக்கொண்ட கைகள் இல்லாத மாற்றுத்திற னாளியின் கால் பிடித்துகுலுக்கி கேரள முதல்வர் பினராயிவிஜயன் வாழ்த்து தெரிவித்தார்.தொலைக்காட்சிகளில் ரியாலிட்டி ஷோ மூலம் தனக்கு கிடைத்த தொகையுடன் இரண்டு கைகளும் இல்லாத மாற்றுத்திற னாளியான பிரணவ் கேரளமுதல்வர் பினராயி விஜயனை செவ்வாயன்று சந்தித்தார். முதல்வரின் நிவாரணநிதியாக அதை காலால்வழங்கினார். முதல்வருக்கு நெருக்கமாக நின்றுகொண்டுஅதே காலால் செல்பியும் எடுத்துக்கொண்டார்.

கைகள் இல்லாத பிரணவுக்கு கைகளாக விளங்கும் தந்தை பாலசுப்ரமணியம், தாயார் சொர்ணகுமாரியுடனும் சட்டமன்ற உறுப்பினர் கே.டி.பிரசேனன் உடனும் வந்திருந்தார். கேரள அரசு மாற்றுத் திறனாளிகளுக்கு உறு துணையாக உள்ளது என்றார் பிரணவ். பிரணவிட மிருந்து காசோலையை பெற்றுக்கொண்ட முதல்வர் இந்த நன்கொடை பெரும் மதிப்பு கொண்டது. காலையில் சட்டமன்ற அலுவலக அறைக்கு வந்தபோது இதயம் தொட்ட அனுபவம் கிடைத்தது என்றார்.சிற்றூர் அரசு கல்லூரியில் பிகாம் பட்டம் படித்தபிரணவ் இப்போது பணி யாளர் தேர்வு (பிஎஸ்சி) எழுதபயிற்சி பெற்று வருகிறார். 

;