tamilnadu

img

ஐந்தாவது குழந்தையும் பெண்ணானதால் மனைவியை கொன்ற கொடூரக் கணவன்

சண்டிகர், ஏப்.20-ஐந்தாவது குழந்தையும் பெண்ணாக பிறந்ததால் விரக்தியடைந்த ஒருவர் தனது குழந்தைகளை ஓரறையில் அடைத்துவிட்டு, தூங்கிக் கொண்டிருந்த மனைவியை கழுத்தைநெரித்து கொன்ற கொடூர சம்பவம் பஞ்சாப்பைஅதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.மனைவியை கொன்ற அந்த நபர் பிறகு தற்கொலை செய்துக் கொள்வதற்குமுயற்சி செய்துள்ளார். ஓர் ஆண் குழந்தையைகூட பெற்றுத் தரவில்லை என்ற காரணத்தினால் அவர்மனைவியை கொலை செய்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இவர்களது மகள்களுக்கு 14, 12, 10 மற்றும் 8 வயதாகிறது. கடைசிமகள் பிறந்து நான்கு மாதமே ஆகிறது.இந்த சம்பவம் தலைநகர் சண்டிகரிலிருந்துசுமார் 81 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள அனந்த்பூர் சாஹிப் என்னுமிடத்தில் நிகழ்ந்துள்ளது.“ஆண் குழந்தை பிறக்காததை மையமாக கொண்ட குடும்ப வன்முறைகள் நடப்பது பஞ்சாப்பில் அரிதான ஒன்றல்ல,” என்று கூறுகிறார் இந்த வழக்கை விசாரித்து வரும் காவல்துறை அதிகாரி குர்ஜித் சிங். “இந்த சம்பவம் மிகவும் மோசமானது. தங்களது தாயை இழந்த அதிர்ச்சியில் இருக்கும் குழந்தைகள் எங்களை அப்பாவித்தனமாக பார்த்தன. அந்தகுழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது” என்று அவர் மேலும் கூறினார்.பஞ்சாப்பை பொறுத்தவரை, கடந்த பலபத்தாண்டுகளாக பெண் குழந்தைகள் இருப்பதை கண்டறிந்தவுடன் அந்த கருவை கலைக்கும் போக்கு சாதாரணமானதாக இருந்து வருகிறது.


இருந்தபோதிலும், கடந்த சில ஆண்டுகளில் இந்த போக்கிற்கு எதிரான நடவடிக்கை மாநிலத்தில் தீவிரப்படுத்தப்பட்டதால் கருக்கலைப்பு சம்பவங்கள் குறைந்து வருகின்றன. 2011ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி பார்க்கும்போது, பஞ்சாபில் 1000 ஆண்களுக்கு 895 பெண்கள் என்றஅளவில் விகிதாச்சாரம் உள்ளது. இது தேசியஅளவிலான விகிதாச்சாரத்தைவிட 45 குறைவாகும்.இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள 43 வயதாகும் ராகேஷ் குமார், தங்களுக்கு ஐந்தாவது குழந்தையும் பெண்ணாக பிறந்ததால் ஏற்பட்ட வருத்தத்தின் காரணமாக தனது மனைவி அனிதா ராணியை (35) கொலைசெய்துவிட்டதாக வாக்குமூலம் அளித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.தனது மனைவியை கொன்ற பிறகு, கழுத்தைவெட்டிக்கொண்டு தற்கொலை செய்ய முயற்சித்த ராகேஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்.“தொடர்ந்து ஐந்தாவது குழந்தையும் பெண்ணாக பிறந்ததால் ஏற்பட்ட கடும் கோபத்தை தாங்க முடியாமல் தூங்கிக் கொண்டிருந்த தனது மனைவியை கொன்று விட்டதாகஅவர் எங்களிடம் கூறினார். ஐந்து பெண் குழந்தைகளையும் எப்படி வளர்த்து ஆளாக்குவேன் என்றும் தனக்கு ஏன் ஆண் குழந்தைகளே பிறக்கவில்லை என்பது குறித்து நினைத்தும்தான் விரக்தியடைந்ததாக அவர் தெரிவித்தார்”என்று காவல்துறை அதிகாரிகள் விவரித்தனர்.“அனைத்து குழந்தைகளும் பெண்ணாகபிறந்ததற்கு அவர் என்னுடைய சகோதரியையேகுறை கூறி வந்தார். ஆனால், இதுபோன்ற மோசமான முடிவை எடுப்பார் என்று நான் ஒருபோதும்நினைத்துக்கூட பார்க்கவில்லை” என்று கூறுகிறார் இறந்த அனிதாவின் சகோதரியும், ராகேஷின் சகோதரரை திருமணம் செய்துகொண்டவருமான சர்ப்ஜித் கௌர்.


“எங்களாலும் அந்த ஐந்து பெண் குழந்தைகளை வளர்த்தெடுக்க முடியாது. இறுதிச்சடங்குகள் நடைபெறும்வரை இந்த மூன்று குழந்தைகளை எனது வீட்டில் வைத்திருக்க முடிவெடுத்துள்ளேன். அதன் பிறகு செய்யவேண்டியது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை” என்றுராகேஷின் சகோதரர் கூறினார்.குடும்பத்தின் வறிய நிலையின் காரணமாக சமீபத்தில் பஞ்சர் கடையொன்றை ஆரம்பித்த ராகேஷால் அதன் பிறகு கூட சூழ்நிலையை சரிசெய்ய முடியவில்லை.ராகேஷிற்கு எதிராக கொலை குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும், விசாரணையின் முடிவில் அவருக்கு ஆயுள் தண்டனையோ அல்லது மரண தண்டனையோ கூட விதிக்கப்படலாம் என்றும் அவர் மேலும் கூறினார்.“என்னுடைய சகோதரியை கொலை செய்ததற்காக ராகேஷ் தனது வாழ்நாள் முழுவதையும்சிறையில் கழிக்க வேண்டுமென்று நாங்கள்விரும்புகிறோம்” என்று சர்ப்ஜித் மனமுடைந்துகூற, அதை அனிதாவின் இரண்டு குழந்தைகள் பாவமாக பார்த்தனர்.


-பிபிசி தமிழ்

;