tamilnadu

img

இந்தியா - பூடான் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

திம்பு,ஆக.17- பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பூடான் பிரதமர் லோதே ஷெரிங் முன்னிலையில் இந்தியா - பூடான் இடையே 5 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. பூடான் பிரதமரின் அழைப்பை ஏற்று இரண்டு நாள் அரசு முறை பயணமாக பிரதமர் நரேந்திர மோடி  பூடான் சென்றுள்ளார். அங்கு பூடான் பிரதமர் லோட்டே ஷெரிங், மன்னர் ஜிக்மி கேஷஷர் நம்கியால் வாங்சக் ஆகியோரை சந்தித்து பேசினார். இந்நிலையில், இரு நாடுகளுக்கிடையிலான வர்த்தக உறவுகளை மேலும் பலப்படுத்தும் வகையில்  பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பூடான் பிரதமர் லோட்டே ஷெரிங் முன்னிலையில் இந்தியா - பூடான் இடையே 5 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

;