tamilnadu

img

மாதவிடாய் நேரத்தில் பெண்கள் சமைக்கக் கூடாது.... மறுபிறவியில் நாயாக பிறப்பார்களாம்...

அகமதாபாத்:
மாதவிடாய் நேரத்தில் பெண்கள் தங்கள் கணவருக்கு உணவு சமைத்தால் மறுபிறவியில் அவர்கள் நாயாகவும், அந்த உணவைஉண்ணும் கணவர், காளை மாடாகவும் பிறப்பார்கள் என்று குஜராத்தைச் சேர்ந்த குருனாஸ்வரூப் தாஸ்ஜி என்ற சாமியார்கூறியுள்ளார்.மாணவியர் மாதவிடாய் காலத்தில் விடுதி சமையலறைக்கு செல்லக் கூடாது என்றுகுஜராத்திலுள்ள ‘ஸ்ரீசகஜ்ஜானந்தா இன்ஸ்டிடியூட்’ என்றபெண்கள் கல்லூரி விதி வகுத்திருந்தது. அந்த அடிப்படையில் அண்மையில் 68 மாணவியரை மாதவிடாய் சோதனைக்கும் உள்ளாக்கியது. இது கடும் சர்ச்சையைக் கிளப்பிய நிலையில், கல்லூரி முதல்வர் ரீட்டா ரணிங்கா உட்பட 3 பேரை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர்.இந்நிலையிலேயே, வீடியோஒன்றில், சாமியார் குருனாஸ்வரூப் தாஸ்ஜி, மாதவிடாய்.. மறுபிறவி என்று கதையடித்துள்ளார்.“மாதவிடாய் நேரத்தில் பெண்கள் கவனக்குறைவாக இருந்து உணவு சமைத்தால் அது பாவமாகும். சாஸ்திரங்களில் அப்படித்தான் கூறப்பட்டுள் ளது. ஆதலால் கணவன்மார்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்” என்றும் சாமியார் மிரட்டியுள்ளார்.

;