tamilnadu

img

குதிரை பேர பணத்தால் வெண்டிலேட்டர் வாங்கியிருக்கலாமே....

அகமதாபாத்:
பாஜகவில் இணையும் மாற்றுக் கட்சி எம்எல்ஏ-க்களை செருப்பால் அடிக்க வேண்டும் என்று குஜராத் மாநில காங்கிரஸ் எம்எல்ஏ ஹர்திக் பட்டேல் ஆவேசப்பட்டுள்ளார்.குஜராத்தில் நடைபெறவுள்ள மாநிலங்களவைத் தேர்தலையொட்டி, எதிர்க்கட்சி எம்எல்ஏ-க்களை வளைக் கும் வேலையில் பாஜக ஈடுபட்டு வருகிறது.காலியாக உள்ள 4 இடங்களில் பாஜக, காங்கிரஸ் கட்சிக்கு தலா 2 இடங்கள் கிடைக்கும் வாய்ப்பு இருந்த நிலையில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்எல்ஏ-க்களான ஆக்சே படேல், ஜீத்து சவுத்ரி மற்றும் பிரிஜேஷ் மெர்ஜாஆகியோரை அண்மையில் ராஜினாமாசெய்ய வைத்தது. 

இந்நிலையில் படேல் சமூகத்தினருக்கான இட ஒதுக்கீட்டுப் போராட் டத்தை முன்னெடுத்தவரும், பின்னாளில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தவருமான ஹர்திக் பட்டேல், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.அதில், “பணத்தின் மீதான பேராசை காரணமாகவே, அவர்கள் (காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள்) அங்கு (பாஜக) சென்றிருக்கிறார்கள்” என் றும் “தங்களுக்கு வாக்களித்த சமானிய மக்களை ஏமாற்றிய அவர்களை செருப்பால் அடிக்க வேண்டும்” என்றுஆவேசம் அடைந்துள்ளார்.
“கடந்த ஒரு மாத காலமாக மாநிலத்தில் பாஜக குதிரை பேரத்தில் ஈடுபட்டு வருகிறது. அவர்கள் ரூ.140 கோடிமுதல் ரூ.150 கோடி வரை செலவிட்டுஇருக்கிறார்கள். இந்த பணத்தைவெண்டிலேட்டர் வாங்க செலவிட்டு இருந்தால் சில உயிர்களையாவது காப்பாற்றி இருக்கலாம்” என்று ஹர் திக் படேல் சாடியுள்ளார்.

;