states

img

புதுச்சேரியில் 2ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்: சீற்றத்துடன் கடல் அலைகள்

புதுச்சேரி, டிச. 8- புதுச்சேரியில் 2ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. கடலில் அலைகளின் சீற்றம் அதிகரித்து காண ப்படுகிறது. புயலால் சேதம் ஏற்படுவதைத் தடுக்க கட்அவுட், பேனர் வைக்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் உருவான குறைந்த காற்ற ழுத்த தாழ்வு நிலை வலுவடைந்து புயலாக மாறியுள்ளது. மாண்டஸ் என பெயர் சூட்டப் பட்டுள்ள புயல் வெள்ளிக்கிழமை இரவு கரையை கடக்கும் என வானிலை மையம்  அறிவித்துள்ளது. புயல் கரையை கடக்கும் போது 90 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று டன் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப் படுகிறது. அதன்படி புதுவையிலும் புயல் கரையை  கடக்கும்போது கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அரசின் அனைத்து துறைகளும் உஷார்படுத்தப் பட்டுள்ளது. பொதுமக்களுக்கு வழிகாட்டு தல்களும் வெளியிடப்பட்டுள்ளது. முக்கிய மாக, காற்றினால் கட்அவுட், பேனர்கள் சரிந்து விழுவதை தடுக்கும் வகையில், அதற்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது. ஏற்கனவே வைக்கப்பட்டிருந்த பேனர், கட்அவுட்டுகள் அகற்றப்பட்டன. இந்நிலையில், கடந்த 2 நாட்களாக வானிலை முழுமையாக மாறி, குளிர்ந்த காற்றுடன் இருண்டு காணப்படுகிறது. கடலில் அலைகள் சீற்றத்துடன் காணப்படு கிறது. புதுவை துறைமுகத்தில் 2ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் புது வைக்கு வரவழைக்கப்பட்டு தயார் நிலை யில் வைக்கப்பட்டுள்ளனர். புதுச்சேரியில் உள்ள 15 கிராம மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லவில்லை. குறிப்பாக காலாப்பட்டு முதல் புதுக்குப்பம் வரை மீன்பிடிக்க செல்லா ததால் விசைப்படகு, பைபர் படகு உள்ளிட்ட  ஆயிரக்கணக்கான படகுகள் தேங்காய் திட்டு மீனவ கிராமத்தில் நிறுத்தி வைக்கப் பட்டுள்ளன. மேலும் அனைத்து அரசு ஊழியர்களும், அதிகாரிகளும் விடுப்பின்றி பணியில் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மழை யால் பாதிக்கப்பட்டால் மக்களை தங்க வைக்க 238 முகாம்கள் தயாராக உள்ளன. 75 ஆயிரம் பேருக்கு தினசரி உணவு வழங்க கல்வித்துறைக்கு உணவு வழங்கும் அட்சயா பாத்திரா நிறுவனம் தயாராக உள்ளது. கூடுதல் உணவு தேவைப்பட்டால் எம்எல்ஏ க்கள் அந்தந்த தொகுதிகளில் உள்ள சமுதாய  கூடங்கள், திருமண மண்டபங்களை பயன் படுத்திக்கொள்ளும்படி அறிவுறுத்தப்பட் டுள்ளது.

;