states

img

புதுச்சேரியில் புத்தக விற்பனை திருவிழா

புதுச்சேரி,ஏப்.23- புதுச்சேரி விளிம்புநிலை மக்கள் வாழ்வதார மையத்தில் அமைந்துள்ள பாரதி புத்தகாளத்தின் சார்பில் நடைபெற்ற உலகப்புத்தக தினதிருவிழா துவக்க விழாவிற்கு கவிஞர் வில்லியனூர் பழனி தலைமை தாங்கினார். லாஸ்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் மு.வைத்தியநாதன் விழாவில் பங்கேற்று புத்தக விற்பனை இயக்கத்தை துவக்கி வைத்தார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கத்தின் தமிழ் மாநில பொருளாளர் சு.ராமச்சந்திரன், கடலூர் மாவட்ட நிர்வாகி கவிஞர் பால்கி ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசினார்கள். புதுச்சேரி நிர்வாகிகள் பச்சையம்மாள், ரவிச்சந்திரன், அரசு ஊழியர் சம்ளேன பொதுச்செயலாளர் ராதாகிருஷ்ணன், கவிஞர்கள் எழுத்தாளர்கள் எல்லை.சிவக்குமார், நடராஜன் மற்றும் பாரதி புத்தகாலயத்தின் புதுச்சேரி பொருப்பாளர் செல்வம் உள்ளிட்ட திரளானோர் விழாவில் பங்கேற்றனர். இப்புத்தக திருவிழா வருகின்ற ஏப்ரல் 24 வரை நடைபெறுகிறது.புத்தக விற்பனை இயக்கத்தை மு.வைத்தியநாதன்,எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.

;