states

img

கர்நாடகாவில் அதிவேகமாக வந்த ஆம்புலன்ஸ் சுங்கச்சாவடியில் மோதிய விபத்தில் 4 பேர் பலி

கர்நாடகாவில் அதிவேகமாக வந்த ஆம்புலன்ஸ், சுங்கச்சாவடி அருகே மோதி விபத்துக்குள்ளானதில் 4 பேர் பலியாகினர்.  

கர்நாடக மாநிலம் உத்தர கன்னடா மாவட்டத்தை சேர்ந்த கஜன லட்சுமண நாயக், உடல் நலக்குறைவு காரணமாக பட்கல் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக, ஆம்புலன்ஸ் மூலம் குந்தாப்புரா வில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு உறவினர்கள் அழைத்துச் சென்றுள்ளனர்.  

அப்போது, உடுப்பி மாவட்டம் பைந்தூர் எல்லைக்குட்பட்ட சிரூர் பகுதியில் உள்ள சுங்கச்சாவடி அருகே வந்து கொண்டிருந்தனர். ஆம்புலன்ஸ் வருவதை கண்ட சுங்கச்சாவடி ஊழியர்கள் அங்கு படுத்திருந்த மாட்டை விரட்டினர்.

பின்னர், சாலை தடுப்புகளை வேகமாக அகற்றிக்கொண்டிருந்தபோது, கட்டுபாட்டை இழந்த ஆம்புலன்ஸ் அதிவேகமாக வந்து சுங்கச்சாவடி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஓட்டுநர் உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 4 பேர் சுங்கச்சாவடி ஊழியர்கள் படுகாயமடைந்தனர்.

இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

;