states

img

அசாம் நிலச்சரிவில் சிக்கி 4 பேர் பலி

அசாமில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 4 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 
அசாம் தலைநகர் கவுகாத்தியில் உள்ள போரகான் அருகே நிசார்பூரில் கனமழை காரணமாக இன்று நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் அங்குள்ள ஒரு வீட்டினுள் மண்சரிவு புகுந்தது. அப்போது வீட்டினுள் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் இடிபாடுகளில் சிக்கி கொண்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த மீட்பு குழுவினர் இடிபாடுகளில் சிக்கிய 4 பேரை சடலமாக மீட்டனர். 
இதுகுறித்து காவல்துறை உதவி ஆணையர் நந்தினி காகதி கூறியதாவது:- உயிரிழந்த 4 பேரும் கூலித்தொழிலாளர்கள். இவர்கள் அப்பகுதியில் வாடகை வீட்டில் வசித்து கட்டிட வேலையில் ஈடுபட்டு வந்தார்கள் என தெரியவந்துள்ளது. சம்பவத்தன்று 4 பேரும் வீட்டினுள் தூங்கிக் கொண்டிருந்தனர்.அப்போது பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து மண் சரிவு வீட்டிற்குள் புகுந்தது. இதில் தொழிலாளர்கள் 4 பேரும் சிக்கிக் கொண்டனர். 
இந்நிலையில் அடுத்த மூன்று நாட்களுக்கு அசாம் மற்றும் மேகாலயாவில் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து ரெட் அலர்ட் விடுத்துள்ளதால் மக்கள் அவசியமில்லாமல் வெளியில் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்
 

;