உத்தரகாண்டில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 79 ஆக அதிகரித்துள்ளது.
உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த வாரம் பெய்த கனமழையால் அம்மாநிலத்தின் பல பகுதிகள் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது. கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில், மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டனர். தற்போது மழை குறைந்துள்ளதால் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை தற்போது 79 ஆக உயர்ந்துள்ளது. 24 பேர் காயமடைந்துள்ளனர். மேலும், 3 பேர் மாயமாகியுள்ளதாகவும் அவர்களைத் தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.