districts

img

மின்வாரியங்களை தனியாருக்கு விட ஒப்பந்தம் பெரம்பலூரில் மின்வாரிய ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர், பிப்.1 - பாண்டிச்சேரி, சண்டிகர் உள்ளிட்ட யூனி யன் பிரதேசங்களில் உள்ள மின்வாரியங் களை தனியாருக்கு விட ஒப்பந்தம் போடப்பட் டுள்ளதை கண்டித்தும், மின்துறையை பொதுத்துறையாக தொடர வேண்டும் என  வலியுறுத்தியும் புதுச்சேரி மின்வாரிய ஊழி யர்கள் மற்றும் பொறியாளர்கள் 1.2.2022 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடு பட்டுள்ளனர். அதற்கு தமிழ்நாடு மின் வாரிய தொழிற் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில் ஆதரவு தெரிவித்து மாவட்ட தலைநக ரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த அறிவித்ததை யொட்டி பெரம்பலூர் நான்குரோடு மேற்பார்வை  பொறியாளர் அலுவலகம் முன்பு மதிய உணவு  இடைவேளையின் போது மின்வாரிய பணியா ளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பொறியாளர் கழகத்தின் சார்பாக மாவட்ட  நிர்வாகி மேகலா, மின் ஊழியர் மத்திய  அமைப்பு சிஐடியு சார்பாக மண்டல செயலா ளர் எஸ்.அகஸ்டின், வட்ட செயலாளர் எம்.பன்னீர்செல்வம், பொறியாளர் தொழிலாளர் சங்கம் சின்னசாமி, ராமசாமி, தொழிற்சங்க நிர்வாகிகள் பெரியசாமி, சந்திரகுமார் உள்பட பொறியாளர் சங்க உறுப்பினர்கள், அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து  கொண்டனர்.

;