districts

img

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்த இளைஞர்கள்

திருவாரூர், பிப்.2-  திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியம் எண்கண்,  திருமஞ்சன வீதியைச் சேர்ந்த 9 இளைஞர்கள் ஐயப்பன் தலைமையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தனர். நிகழ்ச்சிக்கு சிபிஎம் கொரடாச்சேரி ஒன்றியச் செயலாளர் டி.ஜெயபால் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி அனைவருக்கும் கதர் துண்டு அணிவித்து, புதிதாக அமைக்கப்பட்ட கொடிமரத்தில் செங்கொடியை ஏற்றினார். நிகழ்ச்சியில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எம்.சேகர், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் சி.லோகநாதன், கே.செந்தில், அரசவணங்காடு ஊராட்சி மன்றத் தலைவர் எல்.சுலக்சனா லோகநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

;