districts

ஜெர்மனி கொலோன் பல்கலை.யில் தமிழ்ப் பிரிவை காப்பாற்ற வேண்டும் தமிழக அரசுக்கு ஜவாஹிருல்லா கோரிக்கை

பாபநாசம் ஆக.27 - மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும், பாப நாசம் சட்டமன்ற உறுப்பினருமான ஜவாஹிருல்லா  வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஜெர்மனியில் பழம்பெருமை வாய்ந்த கொலோன் பல்கலைக்கழகத்தில் இந்தியவியல் துறையில் தமிழ் பிரிவும் சேர்க்கப்பட்டுச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்தப் பிரிவில் 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட பழம்பெரும் தமிழ்  நூல்களும், ஓலைச்சுவடிகளும் இருப்பதாகத் தெரிகிறது.  நிதிச்சுமை காரணமாக 2020-ல் இந்த பிரிவை மூடும் சூழ்நிலை உருவானது. இதனை மனிதநேய மக்கள் கட்சி தமிழக அரசின் கவனத்திற்குக் கொண்டு சென்றதாலும், வெளிநாட்டு வாழ் தமிழ் ஆர்வலர்களின் உதவியாலும் தமிழக முதலமைச்சர் அளித்த 1.25 கோடி ரூபாய் வழங்கப் பட்டு  பல்கலைக்கழகத்தின் தமிழ் பிரிவு காப்பாற்றப்பட்டது.  தற்போது மீண்டும் நிதிச்சுமை காரணமாகத் தமிழ் பிரிவு மூடப்படும் ஆபத்தில் இருப்பதாக பேராசிரியர் ஸ்வென்  கூறியிருப்பதாக, இந்து தமிழ் திசை நாளிதழில் செய்தி வெளி வந்துள்ளது. இது தமிழ் ஆர்வலர்களுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சிக்கலை தீர்ப்ப தற்குப் பல்கலைக்கழகத்தின் இதர துறைகளுடன் இணைந்து,  மிழையும் அடிப்படையாக்கி ஒரு ஆய்வு நிறுவனத்தை அமைக்க அந்த பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள் திட்ட மிட்டு இருப்பதாகத் தெரிகிறது. எனவே தமிழ் பிரிவைக் காப்பதற்கு ஒரு நபரை நியமிப்ப துடன் போதிய நிதி உதவியையும் வழங்கி, அந்த பல்கலைக் கழகத்தில் தமிழுக்கான இருக்கையை அமைக்க தமிழ்நாடு  அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனிதநேய மக்கள்  கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

;