districts

img

அமைச்சர் கே.என்.நேருவிடம் ஜவாஹிருல்லா கோரிக்கை

பாபநாசம், நவ.10- மனிதநேய மக்கள் கட்சியின் மாநிலத் தலைவரும், பாபநாசம் எம்.எல்.ஏ-வுமான ஜவாஹிருல்லா  சென்னை யில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை  அமைச்சர் கே.என்.நேருவை சந்தித்து கோரிக்கை மனு வழங்கினார்.   அமைச்சரிடம் அவர் அளித்த மனுவில், ‘‘பாப நாசத்தில் மீன், இறைச்சி மார்க்கெட்டை இடித்து விட்டு புதிய நவீன மீன், இறைச்சி மார்க்கெட்டை கட்டித் தர வேண்டும். கடைவீதி, தெற்கு ராஜவீதி, சன்னதி தெரு பின்புறம் கழிவுநீர் வடிகால் அமைக்க வேண்டும். தார்  சாலை அமைக்க முடியாத இடங்களில் பேவர் பிளாக் சாலை அமைக்க வேண்டும்.  அய்யம்பேட்டையில் நவீன கழிப்பறை வசதியுடன் கூடிய புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும், பேரூராட்சிக்கு சொந்தமான பழைய பேரூராட்சி மன்றக்  கட்டடம் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளதால் அதனை இடித்து விட்டு வணிக வளாகம் கட்டித் தர வேண்டும்.  மெலட்டூர் பேரூராட்சியில் உள்ள 9-ஆவது வார்டு ஏர்வாடி பகுதி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்திச் செய்யும் வகையில் குடிநீர் தேக்கத் தொட்டி அமைக்க வேண்டும்’’ என கூறப்பட்டுள்ளது.

;