மொழிப்போர் தியாகி, சுயமரியாதைப் போராளி, பட்டுக்கோட்டை அஞ்சாநெஞ்சன் அழகிரிசாமி நினைவு தினத்தையொட்டி, தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் பராமரிக்கப்பட்டு வரும், அவரது நினைவு மணிமண்டபத்தில், அவரது உருவச் சிலைக்கு, வருவாய் கோட்டாட்சியர் ஜெயஸ்ரீ தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில், பட்டுக்கோட்டை வட்டாட்சியர் த.சுகுமார், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ரெ.மதியழகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.