districts

img

தொழிலாளர்களுக்கு நலவாரிய அட்டைகள் வழங்கல்

பட்டுக்கோட்டை, பிப்.5-  தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை கரிக்காடு ஆட்டோ ஸ்டாண்டில் முறைசாரா உடல் உழைப்பு தொழிலாளர் சங்கம்  (சிஐடியு) சார்பில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நலவாரிய அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.  இதில் சிபிஎம் ஒன்றியச் செயலாளர் எஸ்.கந்தசாமி, முறைசாரா உடல் உழைப்பு  தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் பி.என்.பேர் நீதி ஆழ்வார் ஆகியோர் நல வாரிய அட்டைகளை வழங்கினார்.  இதேபோல், பட்டுக்கோட்டை கொண்டிக்குளம் பகுதியில் கட்டுமானத் தொழிலாளர்கள் 16 பேருக்கு நலவாரிய அட்டை வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், முறைசாரா உடல் உழைப்பு தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் பி.என்.பேர்  நீதி ஆழ்வார், கட்டுமானத் தொழிலாளர்கள் சங்க கிளைச் செயலாளர் சாமிநாதன், சிபிஎம் ஒன்றியக் குழு உறுப்பினர் முருக.சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

;