districts

img

நாச்சியார்கோயிலில் புதுப்பொலிவுடன் கலைஞர் வாரச் சந்தை துவக்கம்

கும்பகோணம்  அக்.22 - தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட நாச்சியார்கோயில் ஊராட்சியில் பொதுமக்கள் வசதிக்காக வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் உழவர் பெருமக்கள், சிறு வியாபாரிகள் கொண்டு வரும் காய்கறிகள், மளிகை பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்வதற்காக நாச்சியார்கோயில் ஊராட்சி கீழவீதியில் புது பொலிவுடன் கலைஞர் வாரச்சந்தை துவங்கப்பட்டது. தமிழக அரசு தலைமை கொறடா கோவி.செழியன் முன்னிலையில், நாச்சியார்கோயில் ஊராட்சியில் கலைஞர் வாரச்சந்தையை மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் செ.இராமலிங்கம் தலைமை வகித்து திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் நாச்சியார்கோயில் ஊராட்சி மன்றத் தலைவர் மகேஸ்வரி உமாசங்கர், ஒன்றியகுழு உறுப்பினர் தமிழரசி குப்புசாமி, ஊராட்சி மன்ற துணை தலைவர், ஊராட்சி செயலர், வார்டு உறுப்பினர்கள், பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஊராட்சி செயலர் வரதராஜன் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.

;