districts

img

கூலித்தொழிலாளியை ஏமாற்றி ஏடிஎம் மையத்தில் பண மோசடி

ஆம்பூர், ஆக.2- திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நியூ டவுன் பகுதி யில் உள்ள கனரா வங்கி ஏ.டி.எம்மில் கிரிசமுத்திரம் பகுதியை  சேர்ந்த கேஸ் கம்பெனியில் பணியாற்றி வரும்  கூலித்தொழி லாளி சரவணன் என்பவர் தனது வங்கி கணக்கில் இருக்கும்  பணத்தை எடுப்பதற்காக ஏ.டி.எம் மையத்திற்கு  சென்றுள் ளார். அப்போது ஏடிஎம் -ல் இருந்த மற்றொரு மர்மநபர் பணம்  எடுத்து தருவது போல் கூறி  கூலித்தொழிலாளி சரவணனை  திசைதிருப்பி அவர் மறைத்து வைத்திருந்த போலி ஏடிஎம் அட்டையை கொடுத்து சரவணனின்  ஏடிஎம் கார்டு பெற்று  கொண்டு சென்றுள்ளார். பின்னர் அடுத்து 2 நாட்களில் ரூ.15 ஆயிரம் ரூபாய் வங்கி  கணக்கில் இருந்து எடுக்கப்பட்டதாக அவருடைய செல் போனுக்கு குறுஞ்செய்தி வந்ததை தொடர்ந்து தன்னிடம் உள்ள  ஏடிஎம் கார்டு  போலியானது என்பதை தெரிய வந்தது. இதனை  தொடர்ந்து  சரவணன் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்த தின் பேரில் காவல்துறையினர்  வழக்கு பதிவு செய்து ஏடிஎம்  கார்டில் கொள்ளையடித்த நபரை தீவிரமாக தேடி வருகின்ற னர்.

;