districts

img

ஒன்றுக்கு மேல் தொகுதிகளில் போட்டி; ஹெலிகாப்டரில் பறந்தார்

பாஜக தலைவர் சுரேந்திரனுக்கு எதிராக ஆர்எஸ்எஸ் விமர்சனம்

திருவனந்தபுரம், மே 4- சட்டமன்ற தேர்தலில் கடும் தோல்வியை சந்தித்த பிறகு பாஜகவின் கேரள மாநில தலைவர் கே.சுரேந்திரனுக்கு எதிராக ஆர்எஸ்எஸ் தலைவர்  இ.என்.நந்த குமார் விமர்சனம் செய்துள்ளார். ‘மோடி’ விளையாடுவதற்காக ஒன்றுக்கு மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிட்டவர் .ஹெலி காப்டரில் சுற்றிப் பறந்தும், நடந்தும் கோமாளித்தனம் செய்தார் என தெரி வித்துள்ளார். இவர் சங்க பரிவார் பதிப் பகமான குருக்ஷேத்ரா வெளியீடுகளுக்குப் பொறுப்பாளராவார். பாஜக மூத்த தலைவர் ஏ.என்.ராதாகிருஷ்ணனின் சகோதரரும் ஆவார். ஒவ்வொரு தேர்தலிலும் புதிய தொகுதி களை நாடுகின்றனர் தலைவர்கள். அவர்கள் தோல்விக்கு தகுதியானவர்கள்தான் என்றும்  நந்தகுமார் தனது முகநூல் பதிவில் தெரி வித்துள்ளார். பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவர் சி.கே.பத்மநாபனும் கூறுகையில், பாஜகவின் முன்னேற்றம் குறித்த கனவு வீணாகிவிட்டது என்று சுரேந்திரனுக்கு எதிராக விமர்சித்துள்ளார். மற்றொரு பாஜக தலைவர் பி.டி.முகுந்தன் கூறுகையில், பாஜக 15 ஆண்டுகள் பின்னோக்கி சென்றுவிட்டது என்று விமர்சித்துள்ளார்.

;