districts

img

சாலையோரம் உள்ள பள்ளத்தை சீரமைக்க கோரிக்கை

சேலம், மார்ச் 28- இடங்கணசாலை அருகே சாலையோ ரம் உள்ள பள்ளத்தை, விபத்து ஏற்படும் முன் பாக சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை  எழுந்துள்ளது. சேலம் மாவட்டம், இடங்கணசாலை நக ராட்சிக்குட்பட்ட இளம்பிள்ளை, கே.கே.நகர்  செல்லும் பிரதான மாவட்ட நெடுஞ்சாலை உள்ளது. காடையாம்பட்டி பெட்ரோல் பங்க்  அருகே உள்ள ஏரிக்கு செல்லும் நீரோடை அருகில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு  காவிரி குடிநீர் குழாய் சீரமைக்கும் பணி களை மேற்கொள்ள பள்ளம் தோண்டப் பட்டது. இந்நிலையில், தற்போது அதே இடத் தில் மீண்டும் குடிநீர் குழாய் உடைப்பு ஏற் பட்டு குடிநீர் வீணாகி வருவதுடன். பிரதான  சாலை ஓரத்தில் மண் அரிப்பு ஏற்பட்டு பெரிய  அளவில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால்  அவ்வழியாகச் செல்லும் அரசு பேருந்துகள்,  பள்ளி கல்லூரி வாகனங்கள் மற்றும் கனரக வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வரு கின்றனர். இரவு நேரங்களில் பள்ளம் இருப் பது தெரியாமல் வரும் வாகன ஓட்டிகள் விபத் தில் சிக்க வாய்ப்பு உள்ளது. எனவே, விபத்து  ஏற்படும் முன்பு சாலையோரம் உள்ள பள் ளத்தை மாவட்ட நெடுஞ்சாலைத்துறை அதி காரிகள் சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

;