districts

ரம்ஜான் நோன்பு இலவச அரிசிக்கு ஒப்புதல் வழங்க சிபிஎம் கோரிக்கை

சென்னை, மே 5-இஸ்லாமியர்களின் ரம்ஜான் நோன்பினை முன்னிட்டு மசூதி களுக்கு இலவச அரிசி வழங்க தலைமை தேர்தல் அதிகாரி ஒப்புதல் வழங்க வேண்டுமென கேட்டு மாரக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், தலைமை தேர்தல் அதிகாரிக்கு கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில் கூறியிருப்ப தாவது:இஸ்லாமியர்களின் ஈகைத் திருநாள் பண்டிகையாகிய ரம்ஜான் வர இருப்பதையொட்டி மே மாதம் 7ம் தேதி முதல் இஸ்லாமியர்களின் ரம்ஜான் நோன்பு துவங்கு கிறது. ஆண்டுதோறும் இப்பண்டி கைக்காக பொருளாதார ரீதியாக பின்தங்கிய பகுதியினருக்கு மசூதிகள் மூலமாக அரசு நோன்புக் கஞ்சிக்காக இலவச அரிசி வழங்கி வருகிறது. இந்த ஆண்டும் இதை வழங்கும் பொருட்டு மாநில உணவு வழங்கல் துறை அரிசி வழங்க பரிந்துரையை தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு அனுப்பியுள்ளதாகக் கூறப்படுகிறது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால், இந்த ஆண்டும் இஸ்லாமியர்களின் இந்த பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் பொருட்டு இந்தப்பரிந்துரையை நிறைவேற்றுவதற்கு தலைமை தேர்தல் அதிகாரி உடனடியாக ஒப்புதல் வழங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோருகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

;