சிக்கண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கிளை சார்பில், இந்திய மாணவர் சங்கத்தினர், தேர்தலில் “என் வாக்கு விற்பனைக்கு அல்ல” என்ற விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் வியாழனன்று நடத்தப்பட்டது. மாணவர் சங்க கிளைத் தலைவர் விமல்ராஜ் தலைமையில் நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தில், மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் திரளாக கலந்து கொண்டு கையெழுத்திட்டனர். இந்நிகழ்வில், மாணவர் சங்க மாவட்டத் தலைவர் கல்கி ராஜ், மாவட்டச் செயலாளர் பிரவீன்குமார், மாவட்டத் துணைத்தலைவர் கிருஷ்ணகுமார், மாவட்டத் துணைச் செயலாளர் மணிகண்டன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.