கோவை, மார்ச் 26- இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நடைபெற உள்ள பிரச்சார பொதுக் கூட்டத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொள்ள உள்ள நிலையில், அதற்கான இடத்தை அமைச்சர் முத்துச்சாமி ஆய்வு செய்தார்.
இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆத ரித்து, தமிழக முதல்வரும், திமுக தலைவ ருமான மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவ தும் சூறாவளி சுற்றுப் பயணத்தில் ஈடுபட்டுள் ளார். அதன் ஒரு பகுதியாக ஏப்ரல் 13 ஆம் தேதி கோவைக்கு வருகை தரும் அவர், கோவை திமுக வேட்பாளர் கணபதி ராஜ்கு மார், பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமி ஆகியோ ருக்கு வாக்கு சேகரிக்க உள்ளார். அதற்காக கோவை எல்.அன்.டி புறவழிச்சாலையில் இடம் தேர்வு செய்யப்பட உள்ளது. அந்த இடத்தினை தமிழக வீட்டுவசதி வாரியம் மற்றும் மதுவிலக்குத்துறை அமைச்சர் சு.முத்துச்சாமி ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது, கோவை தெற்கு மாவட்டச் செயலாளர் தளபதி முருகேசன், வடக்கு மாவட்டச் செயலாளர் தொ.அ.ரவி, கழக சொத்துப்பாதுகாப்பு குழு துணைத்த லைவர் பொங்கலூர் பழனிச்சாமி, மாணவர் அணி மாநிலத் தலைவர் வழக்கறிஞர் ராஜீவ் காந்தி, தலைமை செயற்குழு உறுப்பினர் ஏர்போர்ட் ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.