districts

img

உயிரே போனாலும் நீட் தேர்வை ரத்து பண்ண முடியாது - நீட் தேர்வு குறித்து கேள்வி கேட்ட பெண்ணுக்கு திமிராக பதில் அளித்த அண்ணாமலை!

நீட் தேர்வு ரத்து குறித்து கேள்வியெழுப்பிய பெண்ணிடம், உயிரே போனாலும் நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என திமிராக அண்ணாமலை பதிலளித்தது தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கோவை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் அண்ணாமலை கடந்த செவ்வாயன்று சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். சுல்தான்பேட்டை அடுத்த புளியமரத்து பாளையம் பகுதியில் அண்ணாமலை வாக்கு சேகரித்துக் கொண்டிருந்தபோது பெண் ஒருவர், பாஜக ஆட்சிக்கு வந்தால் என்னனென்ன செய்வீர்கள் என அண்ணாமலையை நோக்கி அடுக்கடுக்கான கேள்விகளை முன் வைத்தார். ஒவ்வொரு கேள்விக்கும் மாநில அரசின் மீது பழி சொல்லி தப்பித்த அண்ணாமலை, ஏராளமான மாணவர்களின் உயிர்களை பலி வாங்கிய நீட் தேர்வை ரத்து செய்வீர்களா என்ற பெண்மணியின் கேள்விக்கு, உயிரே போனாலும் நீட் தேர்வை ரத்து செய்ய மாட்டோம், நீட் தேர்வை விலக்கிவிட்டுதான் அரசியல் செய்ய வேண்டும் என்றால் அப்படிப்பட்ட அரசியல் தேவையில்லை என ஆணவமாக பதிலளித்தார். அண்ணாமலையின் இந்த திமிர் பேச்சு குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

நீட் தேர்வால் தமிழக மாணவர்கள் பலர் தற்கொலை செய்து உயிரை மாய்த்துக் கொண்ட நிலையில், உயிரே போனாலும் நீட் தேர்வை ரத்து செய்யமாட்டோம் என அண்ணாமலை பேசியது தமிழக மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

  

;