districts

img

எரிபொருள் விலை உயர்வை கண்டித்து சிபிஎம் ஆர்ப்பாட்டம்

கரூர், ஏப்.7- தொடர்ந்து உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வை கட்டுப் படுத்த வேண்டும், பொதுத்துறை நிறு வனங்களை தனியார் மயமாக்குவதை கண்டித்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சார்பில் கரூர் மாவட்டம் குளித்தலை, கடவூர், அரவக்குறிச்சி ஆகிய ஒன்றியங்க ளில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கடவூர் வட்டக்குழு சார்பில் ரெட்டிய பட்டி கடை வீதியில்  நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு கடவூர் ஒன்றிய செயலாளர் பி.பழனி வேல் தலைமை வகித்தார். மாவட்ட செயற் குழு உறுப்பினர்கள் கே.சக்திவேல், பி.ராம மூர்த்தி ஆகியோர் கண்டன உரையாற்றி னர். தோகமலை ஒன்றிய செயலாளர் பெரு மாள், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் வீர மலை, வேல்முருகன், ரவி, கண்ணன், மணி கண்டன் உட்பட பலர் கலந்து கொண்டனர். அரவக்குறிச்சி ஒன்றியக் குழு சார்பில் பள்ளப்பட்டி பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் அரவக்குறிச்சி ஒன்றிய செயலாளர் எம்.ஆறுமுகம் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கா.கந்தசாமி, சி.ஆர்.ராஜாமுகமது, மாவட்ட குழு உறுப்பி னர் கே.வி.கணேசன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.  ஆர்ப்பாட்டத்தில் பள்ளப்பட்டி ஆட்டோ சங்க நிர்வாகிகள் இப்ராஹிம், சாதிக், ராமன், வேன் ஸ்டாண்ட் தொழிலாளர்கள் இஸ்மாயில், முபாரக்அலி, பள்ளப்பட்டி கட்சி கிளை காந்தி, நிசார்அலி, வீரமணி, உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்ட னர்.

;