நாகர்கோவில், மார்ச் 26- நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத் தில் திமுக தலைமையிலான ‘இந்தியா ’ கூட்டணியின் சார்பில் கன்னியாகுமரி தொகு தியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் விஜய் வசந்த் போட்டியிடுகிறார்.
வேட்பாளர் விஜய் வசந்த் மார்ச் 26 செவ் வாய்க்கிழமையன்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் கன்னியாகுமரி மாவட்ட அலுவலகத்திற்கு வருகை தந்து, மாநிலச் செயற்குழு உறுப்பினர் எஸ். நூர் முகம்மது, மாவட்ட செயலாளர் ஆர்.செல்ல சுவாமி உட்பட நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு கோரி, வாழ்த்துப் பெற்று தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார்.
இன்று வேட்புமனு தாக்கல்
புதன்கிழமையன்று காலை 10 மணி அளவில் வேட்புமனு தாக்கல் செய்கிறார். அதற்கான அழைப்பையும் விடுத்தார். வேட்பாளருடன் காங்கிரஸ் நிர்வாகிகள், காமராஜ், ரெத்தினகுமார், நவீன்குமார் உட்பட நிர்வாகிகள் வந்தனர்.
சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கள் என்.எஸ்.கண்ணன், எஸ்.அந்தோணி, தங்கமோகன், அகமது உசேன், உஷா பாசி, முத்த தோழர்கள் என்.முருகேசன், கே.மாத வன், மலைவிளை பாசி உட்பட பலர் உடனிருந்தனர்.