court

img

தகுதியில்லாதவர்களை அழைத்ததை எதிர்த்து வழக்கு... வழக்கு முடியும் வரை மோட்டார் வாகன ஆய்வாளர் பணிக்கு நேர்முகத்தேர்வு நடத்தக் கூடாது....

சென்னை:
மோட்டார் வாகன ஆய்வாளர் பணி நேர்முகத் தேர்வை ஒத்தி வைக்க வேண்டும் என்றும் வழக்கு முடியும் வரை நேர்முகத்தேர்வு நடத்தக்கூடாது என்றும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்துக்கு உயர்நீதிமன் றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 113 மோட்டார் வாகன ஆய் வாளர்கள் பணிக்கு விண்ணப்பங்களை வரவேற்று, 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம்,தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டது. இந்த பணிக்குஎழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும்நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப் பட்டிருந்தது.இதற்கான தேர்வில், 1,328 பேர் கலந்து கொண்ட நிலையில், 33 பேரை மட்டும் நேர்முகத்தேர்வுக்கு அழைத்துள்ளதாக கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்குகள் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, 33 பேரை நேர்முகத் தேர்வுக்கு அழைத்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, எழுத்து தேர்வில் பங்கேற்ற 1,328 விண்ணப்பதாரர்களின் சான்றிதழ்களை சரிபார்த்து, தகுதியானவர்களை நேர்முகத்தேர்வுக்கு அழைக்க உத்தரவிடப்பட்டது.

இந்த உத்தரவின்படி , 226 பேரை ஜூலை19 ஆம் தேதி நேர்முகத்தேர்வுக்கு அழைத்துதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டது. நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டவர்களில் சிலர், உரிய தகுதியை பெறவில்லை எனக் கூறி, விண்ணப்பதாரர்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கின் விசாரணை சனிக்கிழமையன்று நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் முன்பு நடைபெற்றது.அப்போது, தேர்வு நடைமுறைகளில் சில குறைபாடுகள் இருப்பதாகக் கருதுவதால், இந்த தேர்வு நடைமுறைகளில் தற்போதைய நிலை நீடிக்க வேண்டும் என்றும் ஜூலை 19 ஆம் தேதி நடைபெற இருந்த நேர்முகத் தேர்வை ஒத்திவைக்கவும் உத்தரவிட்டார். இந்த வழக்கு முடியும் வரை, மோட்டார் வாகன ஆய்வாளர் பணிக்கு நேர்முகத் தேர்வு நடத்தக் கூடாது என்றும் நீதிபதி உத்தரவிட்டார். வழக்கு விசாரணை ஜூலை 19 ஆம்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

;