tamilnadu

img

போக்குவரத்து வாகன ஆய்வாளர்  நேர்முகத்தேர்வு ஒத்திவைப்பு...  

சென்னை:
கொரோனா தொற்று பரவல் காரணமாக போக்குவரத்து வாகன ஆய்வாளர் நேர்முகத்தேர்வு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் அடுத்த மாதம் (ஜூன்) 8 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை நடைபெற இருந்த போக்குவரத்துவாகன ஆய்வாளர் நிலை-2 பணிக்கான நேர்முகத்தேர்வுகொரோனா தொற்று காரணமாக தள்ளிவைக்கப்படுகிறது. அதேபோல், ஒருங்கிணைந்த என்ஜினீயரிங் பணிகளில்அடங்கிய, உதவி மின் ஆய்வாளர், உதவி என்ஜினீயர், தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார உதவி இயக்குநர் பதவிகளுக்கான கலந்தாய்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும். அடுத்த மாதம் 22 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை நடைபெற இருந்த துறை தேர்வுகள் தள்ளிவைக்கப்படுகிறது. அதன்படி இந்த தேர்வானது ஆகஸ்ட் மாதத்தில் நடைபெறும். தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது.

;