தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தாராபுரம் அம்பேத்கர் பயிற்சி மையத்தில் பயின்ற இளைஞர் அரசுப் பணிக்கு தேர்வு

10 Dec 2025, 4:08 pm
தாராபுரம் அம்பேத்கர் பயிற்சி மையத்தில் பயின்ற இளைஞர் அரசுப் பணிக்கு தேர்வு
<p><strong>தாராபுரம் அம்பேத்கர் பயிற்சி மையத்தில் பயின்ற இளைஞர் அரசுப் பணிக்கு தேர்வு</strong></p> <p>திருப்பூர், டிச. 10 - தாராபுரம் அம்பேத்கர் வேலை வாய்ப்பு பயிற்சி பயின்ற இளைஞர் தமிழ் நாடு அரசு உள்ளாட்சி நிதித் தணிக்கைத் துறையில் இளநிலை உதவியாளராக பணி &nbsp;நியமனம் பெற்றிருக்கிறார். தாராபுரம் நகருக்கு அருகில் கண் ணாங்கோயில் ஊராட்சிக்கு உட்பட்ட குள் ளாயிபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் &nbsp;குமரேசன் (வயது 34). இவர் தாராபுரத்தில் &nbsp;உள்ள அம்பேத்கர் வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் கடந்த ஆண்டு பயிற்சி &nbsp;பெற்று வந்தார். அண்மையில் நடைபெற்ற &nbsp;தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணை யம் நடத்திய தொகுதி 4 தேர்வில் பங்கேற்று &nbsp;தேர்வெழுதினார். இந்த தேர்வில் அவர் வெற்றி பெற்றார். நேர்காணலுக்கு அழைக் கப்பட்ட அவர், உள்ளாட்சி தணிக்கைத் &nbsp;துறையில் இளநிலை உதவியாளராக (ஜே.ஏ.) பணி நியமனம் செய்யப்பட்டிருக் கிறார். &nbsp;சென்னையில் செவ்வாயன்று பணி நிய மன ஆணை பெற்ற நிலையில் குமரேசன் &nbsp;புதன்கிழமை தாராபுரம் அம்பேத்கர் வேலைவாய்ப்பு பயிற்சி மையத்திற்கு வருகை தந்து, அதன் பொறுப்பாளர் என். கனகராஜிடம் வாழ்த்துப் பெற்றார். மேலும் &nbsp;கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இதே அம்பேத்கர் வேலைவாய்ப்பு பயிற்சி &nbsp;மையத்தில் படித்துப் பயிற்சி பெற்ற &nbsp;குமரேசனின் தம்பி ராஜேஷ் என்பவரும் &nbsp;இதே போல் அரசுப் பணியாளர் தேர்வா ணையத்தில் தொகுதி 4 தேர்வெழுதி வெற்றி பெற்று, தமிழ்நாடு அரசு கல்வித் துறையில் இளநிலை உதவியாளராக பண &nbsp;நியமனம் பெற்றிருந்தார். ஒரே குடும்பத் தைச் சேர்ந்த அண்ணன், தம்பி இருவரும் &nbsp;அம்பேத்கர் வேலைவாய்ப்பு பயிற்சி &nbsp;மையத்தில் பயிற்சி பெற்று அரசுப் பணி யில் சேர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.