தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

திருப்புவனத்தில் மின்பகிர்மான அலுவலக முறைகேடுகளை கண்டித்து வாலிபர்கள் ஆர்ப்பாட்டம்

9 Mar 2026, 4:24 pm
திருப்புவனத்தில் மின்பகிர்மான அலுவலக முறைகேடுகளை கண்டித்து வாலிபர்கள் ஆர்ப்பாட்டம்
<p><strong>திருப்புவனத்தில் மின்பகிர்மான அலுவலக முறைகேடுகளை கண்டித்து வாலிபர்கள் ஆர்ப்பாட்டம்&#39;</strong></p> <p>சிவகங்கை, மார்ச் 9- சிவகங்கை மாவட்டம் திருப்பு வனத்தில் உள்ள மின்பகிர்மான &nbsp;அலுவலகத்தில் நடைபெறுகின்ற தாக கூறப்படும் முறைகேடுகள் மீது &nbsp;உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி &nbsp;இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் &nbsp;சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருப்புவனத்தில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றியத் &nbsp;தலைவர் முத்துராஜா தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் பேசியவர் கள், கடந்த காலங்களில் மின் இணைப்பிற்காக அளிக்கப்பட்ட ஆவணங்களை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும் என வலி யுறுத்தினர். மேலும் போலி சொத்து &nbsp;வரி ஆவணங்கள் தயாரித்து லஞ் &nbsp;சம் பெற்றதாக கூறப்படும் உதவி &nbsp;பொறியாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இத னால் அரசுக்கு பல கோடி ரூபாய் &nbsp;வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ள தாகவும் தெரிவித்தனர். அதேபோல் திருப்புவனம் 16-வது வார்டில் நிலவும் மின் பற் &nbsp;றாக்குறையை போக்க புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்க வேண் &nbsp;டும் என்றும் கோரிக்கை விடுக்கப் பட்டது. இந்த போராட்டத்தில் மாவட்டத் &nbsp;தலைவர் சத்தியசீலன், மாவட்டச் செயலாளர் சேவகப்பெருமாள், மாநில செயற்குழு உறுப்பினர் தமி ழரசன், மாவட்ட துணைச் செய லாளர் வெங்கடேசன், அனைத்திந் திய ஜனநாயக மாதர் சங்க மாவட்டத் தலைவர் பவித்ரா, மாவட்டச் செயலாளர் ரோகிணி உள்ளிட்டோர் விளக்கிப் பேசினர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.