முந்தய பக்கம்

தேர் சக்கரத்தில் சிக்கி இளைஞர் உயிரிழப்பு

31 May 2026, 8:31 pm
தேர் சக்கரத்தில் சிக்கி இளைஞர் உயிரிழப்பு
<p><strong>தேர் சக்கரத்தில் சிக்கி இளைஞர் உயிரிழப்பு</strong></p><p>நாமக்கல்/சேலம், மே 31- திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வ ரர் கோவில் திருவிழாவில், தேர் சக்கரத்தில் சிக்கி இளைஞர் உயிரிழந்த நிலையில், முதல்வர் விஜய் இரங்கல் தெரிவித்து, குடும்பத்திற்கு நிவாரணத் தொகை அறிவித்துள்ளார். </p><p>நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில் திருவிழா ஞாயிறன்று நடை பெற்றது. </p><p>இதில் தேரோட்டத்தின்போது, தேர் திரும்புகையில், சக்கரத்திற்கும் சுவற்றிற்கும் இடையில் சிக்கி கோவிந்தராஜா என்பவரின் மகன் ஹர்ஷவர்தன் (18) மற்றும் கௌரிசங்கர் என்பவரின் மகன் சஷ்டிகன் (19) ஆகியோர் படுகாயமடைந்தனர். </p><p>சேலம் அரசு மோகன் குமாரமங்க லம் மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி ஹர்ஷவர்தன் உயிரிழந்தார். மேலும், சஷ்டிகனுக்கு தொடர்ந்து சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.</p><p> முதல்வர் இரங்கல் உயிரிழந்த இளைஞரின் உடலுக்கு தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் தமிழன் விஜய்பார்த்திபன், சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ், பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். மேலும், சிகிச்சையில் உள்ள சஷ்டிகனை நேரில் சந்தித்து நலம் விசா ரித்தனர். </p><p>இதனிடையே, உயிரிழந்த ஹர்ஷவர்தனின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்த முதல்வர் ஜோசப் விஜய், அவரது குடும்பத்திற்கு முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram