தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

விசாரணையின்போது இளைஞர் உயிரிழப்பு காவல்துறையினரை கைது செய்ய வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு

25 May 2026, 10:43 pm
விசாரணையின்போது இளைஞர் உயிரிழப்பு காவல்துறையினரை கைது செய்ய வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு
<p><strong>விசாரணையின்போது இளைஞர் உயிரிழப்பு காவல்துறையினரை கைது செய்ய வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு</strong></p><p>சிவகங்கை, மே 25- மானாமதுரையில் போலீஸ் விசார ணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் உயிரிழந்த சம்பவத்தில் தொடர்புடைய காவல்துறையினரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி, உயிரி ழந்த ஆகாஷ் டெலிசனின் பெற்றோர் மற் றும் உறவினர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். </p><p>சிவகங்கை மாவட்டம் மானாமதுரை யைச் சேர்ந்த ஆகாஷ் டெலிசன் (26) என்ப வர், காவல்துறையினரால் விசாரணைக் காக அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரி ழந்தார். </p><p>அவர் மதுரை அரசு ராஜாஜி மருத்து வமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த மார்ச் 8 அன்று உயிரிழந்தார். </p><p>ஆகாஷின் உடற்கூறாய்வில் அவரது உடலில் 28 இடங்களில் காயங்கள் இருந்தது தெரியவந்ததையடுத்து, திருப்புவனம் காவல் ஆய்வாளர் திலீபன் உள்ளிட்ட 6 காவல்துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். </p><p>இந்த வழக்கில் ஆகாஷின் தந்தை ராஜேஷ்கண்ணன் தொடர்ந்த மனுவின் பேரில், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை, இந்த மரணத்தை கொலை வழக்காக மாற்றவும், சாதிய வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யவும் உத்தரவிட்டது. </p><p>மேலும், விசாரணையை சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. </p><p>தற்போது சிபி சிஐடி விசாரணை நடைபெற்று வருகிறது. </p><p>ஆகாஷ் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், சம்பந்தப்பட்ட போலீசாரை கைது செய்யக் கோரி குடும்பத்தினரும், பல்வேறு அரசியல் கட்சியினரும் உடலை பெற்றுக் கொள்ள மறுத்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். </p><p>அரசின் சார்பில் ரூ.6 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. </p><p>இந்நிலையில், சிவகங்கையில் நடை பெற்ற மக்கள் குறைதீர் முகாமில் ஆகாஷ் டெலிசனின் பெற்றோர் ராஜேஷ்கண்ணன், ஆனந்தி மற்றும் போராட்ட ஒருங்கி ணைப்பாளர் லெனின் ஆகியோர் மாவட்ட ஆட்சியர் கா.பொற்கொடியிடம் மனு அளித்தனர். </p><p>79 நாட்கள் கடந்தும் விசாரணை நிறைவடையவில்லை அப்போது அவர்கள் கூறுகையில், “சாதிய வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் 60 நாட்க ளுக்குள் விசாரணை முடிக்கப்பட வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. </p><p>ஆனால் 79 நாட்கள் கடந்தும் விசா ரணை நிறைவடையவில்லை. குற்றப்பத்தி ரிகையும் தாக்கல் செய்யப்படவில்லை. </p><p>முக்கிய குற்றவாளிகளாக அடையாளம் காட்டப்பட்ட காவல்துறையினரின் பெயர் கள் கூட வழக்கில் சேர்க்கப்படவில்லை. </p><p>யாரும் கைது செய்யப்படவில்லை” என்று குற்றம்சாட்டினர். மேலும், புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழக அரசு உடனடியாக தலையிட்டு சம்பந்தப்பட்ட காவல்துறையினரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.