நகராட்சி சுகாதார சீர்கேட்டை கண்டித்து தேனியில் வாலிபர் சங்கம் ஆர்ப்பாட்டம்
3 Mar 2026, 3:38 pm
<p><strong>நகராட்சி சுகாதார சீர்கேட்டை கண்டித்து தேனியில் வாலிபர் சங்கம் ஆர்ப்பாட்டம்</strong></p>
<p>தேனி, மார்ச் 3- நகராட்சி சுகாதாரச் சீர் கேட்டை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் தேனி நகராட்சி அலு வலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தேனி நகராட்சிப் பகுதி யில் குவிந்து கிடக்கும் குப் பைகளை உடனடியாக அக ற்ற வேண்டும்; சேதமடைந்த சாக்கடை கால்வாய்களை சரிசெய்ய வேண்டும் என போராட்டக்காரர்கள் வலி யுறுத்தினர். மேலும், புதிய மற்றும் பழைய பேருந்து நிலையங்களில் குடிநீர், கழிப்பறை, நடைபாதை உள்ளிட்ட அடிப்படை வசதி கள் ஏற்படுத்த வேண்டும் என் றும் கோரிக்கை விடுத்தனர். விளையாட்டு மைதானம் மற்றும் நூலகம் போன்ற வசதிகளையும் அமைக்க வேண்டும் என வலியுறுத்தப் பட்டது. போராட்டத்திற்கு தேனி தாலுகா தலைவர் எம்.நாக ராஜ் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் டி. நாகராஜ் கண்டன உரை யாற்றினார். தாலுகாச் செய லாளர் அறிவானந்தம், துணைத் தலைவர் ஆர்.வெற்றிவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.</p>
