முந்தய பக்கம்

விழுதாய்த் தாங்க வேண்டும்!

20 Dec 2025, 2:23 pm
விழுதாய்த் தாங்க வேண்டும்!
<p><strong>விழுதாய்த் தாங்க வேண்டும்!</strong></p> <p>ஆல மரத்தைப் பாரு &nbsp;அதிலே விழுது நூறு. நாலு பக்கம் கிளைகள் &nbsp;நடுவில் மரமும் இருக்கு. &nbsp;காலப் போக்கில் மரத்தைக் &nbsp;கறையான் அரித்த தாங்கே &nbsp;நீள மாக அடியில் &nbsp;நெடிய பொந்தும் இருக்கு &nbsp;காற்றும் மழையும் அடிக்கும் &nbsp;கல்லாய் மரமும் நிற்கும். நேற்று அடித்தப் புயலில் &nbsp;நில்லா தென்று நினைத்தாய் &nbsp;ஆனால் மரமும் இருக்கு. &nbsp;அதற்குக் காரணம் கண்ணே தூணாய் இருக்கும் விழுது &nbsp;தொடர்ந்து தாங்கும் முன்னே &nbsp;அதனால் மரமும் இருக்கு &nbsp;அடிக்கும் காற்று மழைக்கும் எதற்கும் சாயா திருக்கும் &nbsp;என்று தெரிந்து கொள்வாய். &nbsp;அம்மா அப்பா தளர்ந்தால் &nbsp;அவர்க்கு நீயே விழுது. தம்பி பாப்பா நீங்கள் &nbsp;தாங்க வேண்டும் இதனை.</p>
Share
FacebookXWhatsAppTelegram