அனுபவ நிலங்களுக்கு பட்டா வழங்க வேண்டும்: ஏலகிரி மலைவாழ் மக்கள் கோரிக்கை
29 Mar 2026, 3:34 pm
<p><strong>அனுபவ நிலங்களுக்கு பட்டா வழங்க வேண்டும்: ஏலகிரி மலைவாழ் மக்கள் கோரிக்கை</strong></p>
<p>திருப்பத்தூர், மார்ச் 29- திருப்பத்தூர் மாவட்டம், ஏலகிரி மலை முத்தானூர் கிராமத்தில் ஏலகிரி மலைவாழ் மக்கள் சங்கத்தின் பேரவை கூட்டம் தலைவர் மனோகரன் தலைமையில் நடைபெற்றது. மலைகளில் வசிக்கும் மலைவாழ் மக்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும், மலைகளில் உள்ள கிராமங்களை பாதுகாக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்தக் கூட்டத்தில் மாநில பொருளாளர் சண்முகம் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். சிபிஎம் திருப்பத்தூர் தாலுகா செயலாளர் காமராஜ், செல்வம், ஏலகிரி மலை செயலாளர் பெருமாள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.</p>
