யாரு செல்லம் நீ! - பழனி.சோ.முத்துமாணிக்கம்.
9 May 2026, 2:26 pm
<p><strong>யாரு செல்லம் நீ! - பழனி.சோ.முத்துமாணிக்கம்.</strong></p><p>சிறுமலர் நடுநிலைப்பள்ளி அந்த மாலைவேளையில் மஞ்சள் குளித்தபடி மாணவக் குயில்களின் மகிழ்ச்சி ஆரவாரத்தில் மூழ்கியிருந்தது. </p><p>எல்லா வகுப்புகளுக்கும் அந்த நாளின் கடைசி வகுப்பு கதைசொல்லலாகவோ, உடற்பயிற்சி வகுப்பாகவோ இருக்கும்.</p><p>எட்டாம் வகுப்பு ‘ அ ‘ பிரிவில் எழுந்த சிரிப்பலை நாணயப்பையை உதறியதுபோல் கேட்டது. ஆசிரியர் செவ்வந்தியின் வகுப்பென்றால் மாணவர்க்குக் கொண்டாட்டம்தான்.அவர் பாடம் நடத்தினால் இசைச் சொற்பொழிவு கேட்பதுபோல் இருக்கும். </p><p>திருக்குறள் நடத்தினால்கூட, அதையும் பாட்டாகவே பாடுவார். மாணவர்கள் வீட்டில் எப்படி நடந்து கொள்கிறார்கள் ? பெற்றோருடன் எப்படிப் பழகுகிறார்கள் ?வீட்டுப் பாடங்களைத் தனியாகச் செய்கிறார்களா? மற்ற நண்பர்களுடன் கலந்து பேசி விளையாடுகிறார்களா ? என்று பலகோணங்களில் மாணவர்களைப் பற்றி ஆய்வதும் அவர்களுக்கு வழிகாட்டுவதும் செவ்வந்திக்கு மிகவும் பிடிக்கும். ‘</p><p>செல்லங்களா ..கொஞ்சம் சிரிக்கறத நிறுத்துங்க. நான் கேக்கறதுக்கு விடை சொல்லுங்க ‘.என்று செவ்வந்தி கூறியவுடன் வகுப்பு கப்சிப் என அமைதியானது. ‘ நம்ம வகுப்புல யார்யார் அம்மா செல்லம்? யார்யார் அப்பா செல்லம்?னு சொல்லணும்.</p><p>மணிமாறன், காவியன் ரெண்டுபேரும் வாங்க. அம்மா செல்லம்னு சொல்றவங்க பேரை மணிமாறன் எழுதட்டும். </p><p>அப்பா செல்லம்னு சொல்றவங்க பேரைக் காவியன் எழுதட்டும். ‘</p><p>ஆசிரியர் சொல்லி முடித்தவுடன் இரண்டு மாணவர்களும் மற்ற மாணவர்களிடம் பேசிப் பட்டியலை எடுக்கத் தொடங்கினர். ’ </p><p>பட்டியல் தயாரா ? வர்ற ஞாயிற்றுக்கிழமை அன்னைக்கு உங்க வீட்டுக்கு வந்து உங்க அம்மா அப்பாகிட்டப் பேசலாம்னு இருக்கேன்.</p><p>என்ன நான் வரவா ? ‘ என்று ஆசிரியர் கேட்டவுடனே ஒட்டுமொத்த வகுப்பும் மகிழ்ச்சி ஆரவாரத்தால் கலகலப்பானது. </p><p>டீச்சர் எங்க வீட்டுக்கு வாங்க’ என்று எல்லோரும் அழைக்கத் தொடங்கினர். செவ்வந்தி ஆசிரியர்க்கும் மிக்க மகிழ்ச்சி.மாணவர்கள் தன்மேல் கொண்ட பாசத்தை எண்ணிப் பெருமிதம் கொண்டார். ’ அமைதி..அமைதி..இந்த வாரம் ரெண்டுபேர் வீட்டுக்கு வருவேன். </p><p>காலையில ஒரு வீட்டுக்கும், மாலையில் ஒரு வீட்டுக்கும். எந்த வீட்டுக்குன்னு இப்பச் சொல்ல மாட்டேன்.எல்லாரும் தயாரா இருங்க.</p><p> சரியா?‘ என்ற ஆசிரியரைப் பார்த்து, ‘என்னாங்க டீச்சர், வருவதற்குமுன்னால சொன்னால் தானே நாங்க தயாரா இருக்க முடியும் ‘ என ஒரு மாணவன் சொல்ல, அதையே எல்லோரும் வழிமொழிய, மாலையில் கூடடைய வரும் பறவைகளின் கூச்சலில் அதிரும் ஆலமரமாக விளங்கியது வகுப்பு. ’டேய்..உங்க வீட்டுல எப்போம்போல இயல்பா இருங்கடா. நா</p><p>ன் வருவதற்கு முன்னால சொல்லீட்டு வர்றேன்.’ ஞாயிற்றுக்கிழமை வந்தது. எட்டாம் வகுப்பு, ‘அ’ பிரிவு மாணவர்கள் வீட்டில் ஒரே பரபரப்பு. </p><p>பெற்றோர்களுக்கு வியப்பு, என்னடா பையன் நல்ல பிள்ளையா வீடடங்கி இருக்கிறானே என்று. காலை மணி பத்து.</p><p> செவ்வந்தி ஆசிரியர் மணிமாறன் துணையோடு தன் வீட்டுக்கு வந்ததைப் பார்த்த அமுதனுக்கு மகிழ்ச்சி தாங்கமுடியவில்லை. </p><p>‘ வாங்க டீச்சர் வாங்க. வாடா மணிமாறா என்று வீட்டுக்குள் அழைத்துச் சென்றான். அம்மா அம்மா இங்க வாங்க.</p><p>யாரு வந்திருக்காங்க பாருங்க என்று கூவினான். ’ உக்காருங்க உக்காருங்க என்று சொன்னபடி நாற்காலிகளை எடுத்துப் போட்டான் அமுதன். ’ வாங்க டீச்சர் வாங்க..அமுதன் உங்களப் பத்திச் சொல்லிக்கிட்டே இருப்பான். </p><p>நல்லா இருக்கீங்களா ? என்ன சாப்பிடுறீங்க ? சூடாவா? குளிர்ச்சியாவா?’ ’ரொம்ப மகிழ்ச்சீங்க..இப்பத்தான் காப்பி குடிச்சுட்டு வர்றோம்” உடனே இடைமறித்த அமுதன் ,’அம்மா டீச்சர் அப்பிடித்தேன் சொல்வாங்க. நீங்க பேசிக்கிட்டு இருங்க. </p><p>நான் போய் மோர் கொண்டு வர்றேன்.’ என்று சொல்லிவிட்டு வீட்டுக்குள் சென்றான். செவ்வந்தி ஆசிரியருக்கு ஒரே வியப்பு. </p><p>‘ என்னங்க ? உங்கள உட்காரச் சொல்லிட்டு அவன் விருந்தாளிகளக் கவனிக்கிறான் ‘ என்றார். ’ அமுதன் என் செல்ல மகனுங்க. </p><p>எனக்கு வேலை அதிகமா இருக்கும்போது அவனா முன்வந்து வேலை செய்வான். சமையல்ல கூடஎனக்கு ஒத்தாசையா இருப்பானுங்க. </p><p>வீட்டைப் பெருக்கிறதுக்கும் உதவி செய்வான். தங்கமான பையனுங்க ‘ என்று சொல்லி முடிக்கும் முன் மூவருக்கும் மோர்கொண்டு வைத்தான் அமுதன்.</p><p>’ மிக்க நன்றீங்க.நாங்க புறப்படறோம்.அமுதன் வரட்டுமா ?’ என்று கூறி விடைபெற்றார் செவ்வந்தி. </p><p>மணிமாறனும் சிரித்தபடி அவரோடு சென்றான். சூரியன் ஒளிச் சிறகுகளைச் சுருட்டிக் கொண்டு மேற்குத் திசையில் இறங்கிக் கொண்டிருந்தான். </p><p>’ என்ன மணிமாறா முகிலன் வீட்டுவரை போய்வரலாமா ?’ என்று கேட்ட ஆசிரியரைப் புன்னகையோடு பார்த்த மணிமாறன், “ என்னங்க டீச்சர் அடுத்த ஆராய்ச்சி அந்த வீட்டுலேங்களா ? “ என்று குறும்பாகக் கேட்டான்.</p><p> ’ ஆராய்ச்சியெல்லாம் இல்லைடா. அடுத்த தெருவிலதான் முகிலன் வீடு இருக்கு. </p><p>வா முகிலன் என்ன பண்ணிக்கிட்டு இருக்கான்னு பாத்துட்டுப் போகலாம் “ என்ற செவ்வந்தியைப் பணிவோடு பின்தொடர்ந்தான் மணிமாறன், வகுப்பில் நானும் அம்மா செல்லம்தான் என்று முகிலன் ஆசிரியரிடம் சொன்னதை நினைவுகூர்ந்து. </p><p>அழைப்பு மணியை அடித்தவுடன் வெளியே வந்த முகிலனுக்கு ஒரே வியப்பு. ’ வாங்க வாங்க டீச்சர்.மணிமாறா .</p><p>என்ன ஒரே அதிசயமா இருக்கே. </p><p>உக்காருங்க நாற்காலீல ‘ என்று கூறிய முகிலன் ‘ அம்மா இங்க வாங்க..யாரு வந்திருக்காங்கன்னு பாரும்மா ‘ என அம்மாவை அழைத்தான். </p><p>துவைத்துக் காயவைத்த முகிலனின் சீருடைகளை மடித்துவைத்துக் கொண்டிருந்த முகிலனின் அம்மா அவற்றை அப்படியே வைத்துவிட்டு வந்தார். ’ வாங்கம்மா .எப்பிடி இருக்கீங்க. மணி நல்லா இருக்கியா ? இருங்க குடிக்க ஏதாச்சும் கொண்டு வர்றேன். </p><p>முகிலன் இவங்களோடு பேசிக்கிட்டு இருப்பா ‘ என்று உள்ளே சென்றாள் முகிலனின் அம்மா. </p><p>என்ன முகிலா உன்னோட சட்டை டவுசரை நீயே மடிச்சு வச்சுக்க மாட்டியா ? ’ டீச்சர் எனக்கு அம்மாதான் எல்லாம் செய்வாங்க. கு</p><p>டிக்கத் தண்ணி வேணும்னாலும் கேட்டவுடனே அவங்கதேன் கொண்டுவந்து குடுப்பாங்க.</p><p>அவ்வளவு பிரியம் எம்மேல ‘ என்ற முகிலனை மேலும் கீழுமாகப் பார்த்தார் செவ்வந்தி.</p><p> தேநீரோடு வந்த முகிலனின் அம்மா, ஆசிரியரிடம் முகிலன் பேசியதைக் கேட்டபடியே ,” குடிங்கம்மா..நீயும் குடீப்பா மணி” என்று மேசைமீது தேநீரை வைத்தாள். ’ ரொம்பச் செல்லமா வளத்துட்டேங்க முகிலனை. படிக்கற பையனுக்கு எதுக்குத் தொந்தரவுன்னு நானே மேப்போட்டு எல்லா வேலையையும் செஞ்சுருவேங்க.” என்றார் சிரித்துக்கொண்டே கேட்ட ஆசிரியர், “ அப்போ நான் பொறப்படறங்க . </p><p>முகிலன் வரட்டுமா “ என்று சொன்னபடி விடைபெற்றார். ‘நாளை சந்திக்கலாம்டா ‘ என்று முகிலனுக்குக் கையை ஆட்டிவிட்டுப் புறப்பட்டான் மணிமாறன். </p><p>திங்கள் கிழமை மாலை .செவ்வந்தி ஆசிரியரின் வகுப்பு சிரிப்பொலியால் நிரம்பி வழிந்தது. </p><p>போன வகுப்பில எல்லார்கிட்டயும் ஒரு கேள்வி கேட்டேனே நெனவிருக்கா என்று கேட்டார்.</p><p> வகுப்பின் மூன்றாம் வரிசையில் இருந்து குரல் வந்தது, ‘ அம்மா செல்லமா அப்பா செல்லமா..யாராருன்னு..’ ” சரியாச் சொன்னீங்க. </p><p>நேத்து ரெண்டுபேர் வீட்டுக்குப் போயிருந்தோம் நானும் மணிமாறனும். ரெண்டு அம்மா செல்லத்தைப் பார்த்தோம். </p><p>அவங்க யாருன்னு பேர் சொல்ல மாட்டோம்.ஆனா யாரு உண்மையான அம்மா செல்லம்னு மணிமாறன் சொல்வான்.</p><p>” என்று ஆசிரியர் சொல்லி முடித்ததும் மணிமாறன் எழுந்து வந்து நின்றான். எல்லா மாணவர்களும் ,’யார் அந்த ரெண்டு பேர் ? ‘ என்று தெரிந்துகொள்ளும் ஆவலில், எல்லோருடைய கண்களும் மணிமாறன் மீது பதிந்திருந்தன. “ நண்பர்களே நேற்று நானும் ஆசிரியரும் காலையில ஒரு நண்பன் வீட்டுக்குப் போனோம். அவனுக்கு அவனோட அம்மான்னா ரொம்பப் பிடிக்கும்.</p><p> அம்மா வீட்டு வேலை முழுவதும் செஞ்சாங்கன்னா சிரமப்படுவாங்கன்னு நெனச்சு, கூடமாட வீட்டுவேலைங்கள இவனும் செய்யறான். </p><p>பார்த்தபோது ரொம்பப் பெருமையா இருந்துச்சு. பொழுது சாயுங்காலையில இன்னொரு நண்பன் வீட்டுக்குப் போயிருந்தோம்.அவனும் அம்மா செல்லம்தான். </p><p>ஆனா இவனுக்குத் தேவையானதை எல்லாம் அவனோட அம்மாதான் செய்யணும். </p><p>தண்ணீர் குடிக்கணும்னாக்கூட அம்மாதான் கொண்டுவரணும். இவனோட சட்டை துணிமணிகளைக்கூட அம்மாதான் மடிக்கணும்.ஐயா வேடிக்கை பார்த்துக்கிட்டுச் சும்மாதான் இருப்பார். நாம் யாருமேல பிரியமா இருக்கோமோ அவங்களுக்கு உதவியா இருந்தாத்தான் உண்மையான பாசம் .</p><p>இல்லாட்டி அது வேசம். “என்று பேசி முடித்தான் மணிமாறன். </p><p>செவ்வந்தி டீச்சர், என்னடா இப்பப் புரியுதா நீங்க யாரு செல்லம்னு கேட்டவுடன், ஒட்டுமொத்த மாணவர்களும் ‘புரியுது டீச்சர்’ என்று சேர்ந்து உரக்கச் சொன்னது வகுப்பறைக்கு வெளியேயும் கேட்டது. அதில் முகிலனின் மெல்லிய குரலும் அடங்கியிருந்தது. **<strong> </strong></p>
