உழைக்கும் மக்கள் ஆசிரியர் தினக் கொண்டாட்டம்
4 Jan 2026, 5:55 pm
<p><strong>உழைக்கும் மக்கள் ஆசிரியர் தினக் கொண்டாட்டம்</strong></p>
<p>கல்விப் போராளி சாவித்திரிபாய் புலேவின் பிறந்தநாளை முன்னிட்டு, தமுஎகச திருவொற்றியூர் - எண்ணூர் கிளை சார்பில் ‘உழைக்கும் மக்கள் ஆசிரியர் தினம்’ சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. கிளைத் தலைவர் விஜயலட்சுமி தலைமை தாங்கினார். சிறுவர்கள் ஜோதிபாய் புலே, சாவித்திரிபாய் மற்றும் பாரதியார் வேடமணிந்து அவர்களின் சிறப்புகளை விளக்கினர். பாலபுரஷ்கார் விருது பெற்ற எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணன் எழுதிய நூல்களைச் சிறார்கள் அறிமுகம் செய்தனர். தொடர்ந்து, விஷ்ணுபுரம் சரவணனின் “இடம்” என்ற சிறுவர் நாவலின் அட்டைப்படத்தை மாணவர்கள் வெளியிட்டனர்.</p>
<p> </p>
